பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி/ கள்ளிப்பூச்சிகள்: சூடோகாக்லாங்கிஸ்டைனஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • மாவுப்பூச்சிகள் தென்னையில் இளம் திசுக்கள் வளரும் இளம் மட்டைகள், ஓலைகள், பூம்பாலைகள், புல்லி/ அல்லி வட்டம் என அனைத்துப் பகுதிகளையும் தாக்குகின்றன.
  • இவை விரியாத பூம்பாளைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிவிடுவதால் இலைகள் காய்ந்து, மஞ்சள் நிறமடைந்து, காய்ந்து விடுகின்றன.
  • இதன் விளைவாக இலைகளின் வளர்ச்சி குறைந்து, மிகவும் குன்றி, சுருள் சுருளாகக் காணப்டுகின்றன.
  • இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஓலை அழுகல் நோயின் அறிகுறிகளைப் போன்றே காணப்படுகின்றன.
  • தாக்கப்பட்ட பாளைகள் விரிவது இல்லை. அவை விரிந்தாலும் சரியாகக் காய்ப்பது இல்லை.
  • இளம் குரும்பைகளில் காம்புக்கு அடியில் இம்மாவுப் பூச்சிகள் கூட்டமாக இருந்து கொண்டு சாறை உறிஞ்சுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட குரும்பைகள் பூச்சி பெருக இடமளிப்பதால், அவை அங்கேயே பெருகிப் பின் பல மரங்களைத் தாக்குகின்றன.
மாவுப்பூச்சி கூட்டம்
வளர்ச்சி குன்றிய இலைகள் சுருக்கமுடைய இலைகள்

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • நிம்ப்: இளம் பூச்சி நிம்ப் எனப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில், தட்டையாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • முதிர்ந்த பூச்சி: ஆண் பூச்சிகள் மஞ்சள் நிறத்திலும், பெண் பூச்சிகள் நீளவாக்கில் சற்று ஒல்லியாக வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
    வாழ்க்கைச் சுழற்சி:-

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • இப்பூச்சி தங்கி வளரும் பிற களைச் செடிகளை அகற்ற வேண்டும். தாக்கப்பட்ட மரத்தின் ஓலை மற்றும் பிற பாகங்களை அகற்றி அழிக்க வேண்

இராசயன முறை:

  • கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவும்:
    • மாலத்தியான் 50 EC - 2 மி.லி/ லி
    • டைமெத்தோயேட் 30 EC -1 மி.லி /லி
    • மெத்தில் டெமட்டான் 25 EC - 1 மி.லி / லி
    • பாஸ்போமிடான் 40 SL - 1.25 மி.லி / லி
    • மீத்தோமைல் 25 EC - 2 மி. லி/லி
    • 3% வேப்ப எண்ணெய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015