பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தென்னை ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி: கங்காரா திர்ஸிஸ்: சூஸ்டஸ் கிராமின்ஸ்

இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தென்னை ஓலையின் ஒரு பகுதி மட்டும் கத்தரித்ததுபோல் வளைந்து, நெளிந்து காணப்படும்.
  • இவ்வாறு சுருண்ட இலைகள் வறண்டு காய்ந்திருக்கும்.
சுருண்ட இலை
காய்ந்த சுருண்ட இலை

பூச்சியை அடையாளம் காணுதல்:

கங்காரா திர்ஸிஸ் முட்டை கங்காரா திர்ஸிஸ் கூட்டுப்புழு கங்காரா திர்ஸிஸ்
சூஸ்டஸ் கிராமின்ஸ் முட்டை சூஸ்டஸ் கிராமின்ஸ் கூட்டுப்புழு சூஸ்டஸ் கிராமின்ஸ்

மேலாண்மை:

இராசயன முறை:

  • தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும், கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை 2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015