பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள்

சாறு வடிதல் நோய்: தீலவியாப்ஸிஸ் பாரடாக்ஸா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஜூலை முதல் நவம்பர் மாதத்தில் இந்நோய் வேகமாக பரவுகிறது.
  • சாறு வடிதல் நோயை மரத்தின், நீள்வெட்டு வெடிப்பு மற்றும் காயங்களிலிருந்து கருஞ்சிவப்பு நிற சாறு சில அடி துாரத்திற்கு தாரை தாரையாக வடிவதை கொண்டு அறியலாம்.
  • நோய் முற்றும்போது புள்ளிகள் மேல்நோக்கி பரவுகிறது.
  • கசியும் சாறு காய்ந்து கருப்பு நிறமாகி விடும்.  புள்ளிகளுக்கு அடியில் உள்ள திசுக்கள் அழுகி முதலில் மஞ்சள் நிறமாகிபின்னர் கருப்பாகி விடும்.
  • நோய் முற்றிய நிலையில் மரத்தில் உட்பகுதி அழுகி நடுவில் குழாய் போன்ற இடைவெளியுடன் காணப்படும்.
  • தண்டின் திசுக்கள் தீவிரமாக பாதிப்படையும் போது,  வெளிச்சுற்று ஓலைகள் மஞ்சள் நிறமாகி,  காய்ந்து,  முதிரும்முன் உதிர்ந்து விடும். குலைவிடுவதும் கடுமையாக பாதிப்படைகிறது.
     
  அடர்ந்த சிவப்பு பழுப்பு திரவம்   கருப்பு நிற காய்ந்த சாறு   பாதிக்கப்பட்ட தென்னை
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • தண்டில் காயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • மரம் ஒன்றுக்கு, ஆண்டிற்கு 50கி.கி தொழுஉரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கினை 200 கிராம் எதிர் உயிர் பூஞ்சை டிரைகோடெர்மா விரிடி உடன் கலந்து குழிகளில் இட வேண்டும்.
  • வெயில் காலங்களில் போதிய பாசன வசதியையும், மழைக்காலங்களில் போதிய வடிகால் வசதியையும் மேற்கொள்ள வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட உரங்களை சரியான அளவில் இட வேண்டும்.

இரசாயன முறைகள்

  • முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை செதுக்கி அந்த காயத்தின் மீது 5% டிரைடிமார்ஃப் அல்லது 1 % போர்டோ பசை தடவலாம். அதைத் தொடர்ந்து ஒன்று இரண்டு நாட்களுக்கு பின் தாரை ஊற்றலாம். செதுக்கிய பகுதிகளை  எரித்து விட வேண்டும்.
  • டிரைடிமார்ப் 5 மில்லியை 100 மில்லிதண்ணீரில் கலந்து வருடத்திற்கு மூன்று முறை ஏப்ரல் - மே, செப்டம்பர் - அக்டோபர், ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் வேர் மூலம் செலுத்துவது அழுகல் பரவுவதை தடுக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015