| 
        
          
            
              | பயிர் பாதுகாப்பு  ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |  
          
            | 
 
 
                
                  |  |  
                  | 1. காய்த்துளைப்பான்,  ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா |  
                  |   தாக்குதலின்  அறிகுறிகள் 
                      பூச்சியின்  அடையாளம்இளம் புழு இலைகளையும், நுனிக்குருத்துகளையும்  தாக்கி சேதப்படுத்தும்வளர்ச்சியடைந்த புழு காய்களைத் துளைத்து  உட்சென்று திசுவை உண்கிறது.சேதம் அதிகமாகும் நிலையில், புழு மொக்கு  முழுவதையும் உண்டு சேதப்படுத்தும். 
                      முட்டை - வெள்ளை நிறமாக இருக்கும்.புழு - பச்சைக் கலந்த பழுப்பு நிறத்தல் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்.கூட்டுப்புழு - பழுப்பு நிறமுடையதுஅந்துப்பூச்சி - பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில்  இருக்கும். முன் இறக்கையில் V வடிவத் திட்டுகள் காணப்படும்.  கட்டுப்படுத்தும்  முறை 
                      கோதுமை அல்லது வார்கோதுமை ஆகியவற்றை  ஊடு பயிராக பயிரிடலாம்.தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத்  தவிர்க்க வேண்டும்.இயற்கை எதிரிகளான காம்போலிடிஸ் குளோரிடே,  எனிகோஸ்பில்லஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.சேதம் அதிகமாகும் நிலையில்  மோனோகுரோட்டபாஸ் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 800 லிட்டர் தண்ணீரில் கலந்துத்  தெளிக்கவும். |  
                
                  |  |  
                  | 2. குசம்பப்பூ புழு, பெரிகேயா கேப்னிஸ் |  
                  | 
                      
                        |  |  தாக்குதலின்  அறிகுறிகள் 
                            பூச்சியின்  அடையாளம்இளம் புழு இலைகளையும், சில நேரங்களில்  காய்களையும் தின்று சேதப்படுத்தும். 
                            புழு - பச்சைய மற்றும் மென்மையாக இருக்கும்அந்துப்பூச்சி - நடுத்தர பருமனுடையது, பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும்.  பின் இறக்கை அடர்ந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். |  கட்டுப்படுத்தும் முறை 
                      கோதுமை அல்லது வாற்கோதுமை ஆகியவற்றை  ஊடு பயிராக பயிரிடலரம்.தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத்  தவிர்க்க வேண்டும்.காப்பரில் தூளை எக்டர்க்கு 3 கிலோ வீதம்  தூவி புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம். |  
                
                  |  |  
                  |  3. மொக்கு ஈ, அகன்தோபைலஸ் ஹெலியாந்த் |  
                  | தாக்குதலின்  அறிகுறிகள் 
                      இளம் புழு இலைகளையும், மொக்குகளையும்  உண்டு சேதப்படுத்தும்.தாக்கப்பட்ட மொக்குகளில் சிறிய துளைகள்  காணப்படும்.சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட  மொக்குகள் அழுகிவிடும்.தாக்கப்பட்ட மொக்குகளிலிருந்து துர்நாற்றம்  கெரண்ட திரவம் வடியும். பூச்சியின் அடையாளம் 
                      புழு - வெள்ளை நிறமுடையது, தலை கிடையாது.ஈ - சாம்பல் நிறமுடையது, பழுப்பு நிறக் கால்களைக்  கொண்டது. கட்டுப்படுத்தும்  முறை 
                      டைமீத்தேயேட் 650 மிலி (அ) மாலத்தியான்  200 மிலி மருந்தை எக்டர்க்கு 650 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளித்து மொக்குப்புழுவின்  தாக்குதல்களைக் குறைக்கலாம். |  
                
                  |  |  
                  | 4. சேம்பப்பூ அசுவினி, யுரோலூகான் கார்த்தாமி |  
                  |  | பூச்சியின்  அடையாளம் 
                      குஞ்சுகள் - சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில்  இருக்கும்.அசுவினி - கருமை நிறமுடையது, வயிற்று பகுதிக்குக் கீழே இரண்டு குழாய் போன்ற நீட்சிகளைக் கொண்டிருக்கும்.  தாக்குதலின்  அறிகுறிகள் 
                      குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின்  சாறை உறிஞ்சுகிறது.தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மஞ்சள்  நிறமாக மாறிவிடும்.குஞ்சுகள் கழிவுநீர் போன்ற திரவத்தை  இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்யும்.தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற  பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்.இறுதியாக செடிகள் காய்ந்து விடும். |  
                  | கட்டுப்படுத்தும்  முறை 
                      காலம் கடந்து விதைத்தலைக் தவிர்த்தல்  வேண்டும்.தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத்  தவிர்க்க வேண்டும்.கோதுமை, சோளம் ஆகியவற்றை ஊடுபயிராக  3 வரிகளுக்கு இடை இடையில் நடலாம்.செடிக்கு 1 - 2 கிரைசோபெர்லா புழுவை  வெளியிட்டு அசுவினியை அழிக்கலாம்.இயற்கை எதிரிகளான ஏபிலினஸ், மைக்ரோமஸ்  ஆகியவற்றை பயன்படுத்தி அசுவினியின்  எண்ணிக்கையைக்  குறைக்கலாம்.நடவு செய்த 60 நாட்கள் கழித்து டைமீத்தேயேட்  750 மிலி மருந்தை எக்டர்க்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அசுவினியின் தாக்குதலைக்  குறைக்கலாம் |  |  
 |