| பயிர் பாதுகாப்பு  :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                  | 
                பொதுப்பெயர்     :  எள்  
                  அறிவியல் பெயர்    : ஸெஸாமம் இண்டிகம் 
                  குடும்பம்          : பெடாலிஸியெ  | 
               
             
               
              
                
                  |   | 
                 
                
                  1. குருத்து இலைப்பிணைக்கும் புழு: ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ்  | 
                 
                
                  
                    
                        | 
                      தாக்குதலின்  அறிகுறிகள்
                        
                          - இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக்  கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்.
 
                          - வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும்  காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்.
 
                         
                        பூச்சியின்  விபரம் 
                        
                          - புழு - இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற  ரோமங்கள் காணப்படும்.
 
                          - அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி மிகவும் சிறியது, இளம் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும்.
 
                         
                        கட்டுப்படுத்தும் முறை 
                        
                          - சரியான பருவத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.
 
                          - ஊடு பயிராக சிறுதானியங்கள், நிலக்கடலை  ஆகியவற்றை பயிரிடலாம்.
 
                          - நடவு செய்த 45 நாட்கள் கழித்து மாலத்தியான்  அல்லது பாஸலோன் தூளை எக்டர்க்கு 25 கிலோ வீதம் தூவி இலைப்பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
 
                          | 
                     
                    
                        | 
                       
                    | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  2. பச்சைக்கொம்பு புழு: அகிரோன்ஸியா ஸ்டிக்ஸ்  | 
                 
                
                  
                    
                        | 
                      தாக்குதலின் அறிகுறிகள் 
                        
                          - புழு இலைகளை உண்டு சேதப்படுத்தும்.
 
                         
                        பூச்சியின் விபரம்  
                        
                          - புழு - உருண்டை வடிவமானது, உடலின் பக்கவாட்டில் மஞ்சள் நிறக்கோடும், பின் பகுதியில் கொம்பு போன்ற உறுப்புகளும் காணப்படும்.
 
                          - அந்துப்பூச்சி - பழுப்பு நிறமுடையது, முன் இறக்கையில் கருப்பு, பழுப்பு , மஞ்சள் வண்ண புள்ளிகளும் மற்றும் கோடுகளும் காணப்படும், பின் இறக்கையில் மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். 
 
                          | 
                     
                   
                    
                    கட்டுப்படுத்தும் முறை 
                    
                      - நிலத்தை ஆழமாக உழுது அந்துப்பூச்சியின்  கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
 
                      - கைகளினால் பச்சைக் கொம்பு புழுவைச்  சேகரித்து அழிக்கலாம்.
 
                      - நடவு செய்த 45 நாட்கள் கழித்து மாலத்தியான்   தூளை எக்டர்க்கு 25 கிலோ வீதம் இரண்டு முறை தூவி அந்துப்பூச்சியின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
 
                    | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  3.காய் ஈ: டாஸியூனிரா அள்பிஸிங்டஸ்  | 
                 
                
                  அறிகுறிகள்: 
                    
                      - மொட்டை துளைத்து உண்பதால் பூக்களை சேதப்படுத்துகின்றன
 
                     
                    பூச்சியின்  விபரம்: 
                    
                      - புழு: வெள்ளையாக, கால்கள் இல்லாமல் இருக்கும்
 
                      - முதிர்ப்பூச்சி: கொசு போன்ற ஈ வடிவில்  இருக்கும்
 
                     
                    கட்டுப்பாடு: 
                    
                      - புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்
 
                      - புழு ஒட்டுண்ணியான பிளிரோமலஸ் போஸியாட்டிஸ்  – ஐ வயலில் விட வேண்டும்
 
                      - டைமெத்தியோட் 0.03% என்ற அளவில் மொட்டு மலரும் நிலையில் தெளிக்க வேண்டும். 
 
                    | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  4. எள்  காய் ஈ: ஆஸ்பன்டைலியா செசாமி  | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - புழு பூவினையும், இனவிருத்தி உறுப்புகளையும்  உண்டு சேதப்படுத்தும்.
 
                      - உற்பத்தியாகும் காய்கள் வீக்கங்களாக  உருண்டும் பெருத்தும் காணப்படும்.
 
                      - பாதிப்படைந்த மொக்குகள் உதிர்ந்துவிடும்.
 
                                       
                    
                        | 
                        | 
                      பூச்சியின்  விபரம்
                        
                        
                          - புழு - சிறியது, வெள்ளை நிறமுடையது, கால்கள் இருக்காது.
 
                          - காய்  ஈ - கொசு போன்று சிறியதாக இருக்கும்.
 
                         
                        கட்டுப்பாடுகள் 
                        
                          - சிறுதானியங்கள், நிலக்கடலை ஆகியவற்றை  ஊடுபயிராக பயிரிடலாம்.
 
                          - பாதிக்கப்பட்டக் காய்களை கிள்ளி அகற்றிவிட  வேண்டும்.
 
                          - புழு ஒட்டுண்ணியான ப்ராக்கன், யெரிடோமா  ஆகியவற்றை பயன்படுத்தி காய் ஈக்களின் புழுக்களை அழிக்கலாம்.
 
                          - மொக்கும் உருவாகும் தருவாயில் எக்டர்க்கு  கார்பரில் 2.5 கிலோ தூளை தூவி காய் ஈக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 
                          | 
                     
                    | 
                 
               
                
                  |   | 
                 
                
                  5. தத்துப்பூச்சி: ஒரோசியஸ் அல்பிசின்டஸ்  | 
                 
                
                   தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின்  சாறை உறிஞ்சுகிறது.
 
                      - தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.  மேலும் இலைகளின் நுனி சுருண்டுவிடும்.
 
                      - சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட  இலைகள் காய்ந்து கீழே விழுந்து விடும்.
 
                      - இப்பூச்சியின்  தாக்குதலால் பூவிழை நோய் என்ற வைரஸ் நோய் பரவுகிறது.
 
                   
                    
                      
                          | 
                          | 
                        பூச்சியின்  விபரம் 
                          தத்துப்பூச்சி - பழுப்பு நிறத்தில் இருக்கும். 
                          கட்டுப்பாடு: 
                          
                            - தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அகற்ற  வேண்டும்.
 
                            - இமிடோகுளோரோபிட் (5கி/கிலோ) மூலம்  விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும்.
 
                            - துவரையை எள்ளில் ஊடுபயிராக 6:1 என்ற  விகிதத்தில் பயிரிடலாம்.
 
                            - மோனோகுரோட்டபாஸ் (அ) டைமீதேயேட்  500 மிலி மருந்தை தெளித்துத் தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
 
                            | 
                       
                      | 
                 
               
              
                
                  |   | 
                 
                
                  6. அசுவினி: ஏப்பிஸ் காஸ்ப்பி  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள் 
                    
                      - குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின்  சாறை உறிஞ்சுகிறது.
 
                      - தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடுகிறது.
 
                      - குஞ்சுகள் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை  இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது.
 
                      - இதனால் இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால்  கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடுகிறது.
 
                     
                    
                      
                          | 
                         பூச்சியின் விபரம் 
                          
                            -  அசுவினி - மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் இருக்கும்.
 
                           
                          கட்டுப்பாடு 
                          
                            - இமிடோகுளோர்பிட் மூலம் விதை நேர்த்திச்செய்த  விதைகளை விதைக்க வேண்டும்.
 
                            - நடவு செய்த 20,40 மற்றும் 60 நாட்கள்  கழித்து மோனோகுரோட்டபாஸ் மற்றும் தண்ணீருடன் கலந்த கலவையை 1:4 என்ற விகிதத்திலும்  அல்லது இமிட்டோகுளோர்பிட், தண்ணீர் கலந்த கலவையை 1:20 என்ற விகிதத்திலும் தண்டின்  மேல் தெளிக்க (அ) வண்ணம் பூச வேண்டும்.
 
                            | 
                       
                     
                   | 
                 
                | 
           
         
         
 |