பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும்.  இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.
  • பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்
  • பூச்சிகள் இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை  சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும். எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.  
  • வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்.
 
  இலைகளில் வெள்ளை நிற துாள்கள் தேன் போன்ற திரவங்கள் நிலம்/மண் மீது வெள்ளை நிறத் துகள்கள் பாதிக்கப்பட்ட வயல்
பூச்சியின் விபரம்: 
  • அசுவினிகள் குட்டி போடும் இனப்பெருக்க முறை கொண்டவை. நான்கு முறை தோலுரித்தப்பின் முழு பூச்சியாக உடலுறுப் பெறுகின்றன.  இறக்கைகளற்ற பெண் பூச்சி பாலினச் சேர்க்கை (இல்லாமலே) நடைபெறாமலே கருவுறுகின்றது.  கருவுற்ற 24 மணி நேரத்தில் 15-35 பெண் குஞ்சுகளை அசுவினிகள் ஈனுகின்றன. ஒவ்வொரு பெண் பூச்சியும் 217 குஞ்சுகள் வரை தன் 20 நாட்களில் ஈனுகின்றன.  இதில் பெண் குஞ்சுகள் அதிகமாக இருப்பதே இதன் விரைவான பெருக்கத்திற்குக் காரணம் ஆகும்.  இக்குஞ்சுகள் 6-22 நாட்களில் 4 இளங்குஞ்சு நிலைகளைக் கடந்து முதிர்ச்சி அடைந்து விடுகின்றன.
            பெண் பூச்சிகள் ஒரு மாத காலம் மட்டுமே வாழும். வளர்ந்த பூச்சிகளின் நெடுநாள் வாழ்வு 32-57 நாட்கள் வரை மட்டுமே.  இனம் மற்றும் தட்பவெப்பநிலையைப் பொறுத்து வாழ்க்கைச் சுழற்சி வேறுபடும்.  பெரும்பாலான தாக்கப்பட்ட வயல்களில் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த அசுவினிகள் காணப்படும்.

   
  இளம் குஞ்சு   அசுவினி
கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் மற்றும் இயற்பியல் முறைகள்:

  • இரட்டைப் பார் நடவு முறையைப் பின்பற்றுதல்.
  • அதிகப்படியான நைட்ரஜன் அல்லது அம்மோனியம் உரமிடுதலைத் தவிர்க்கவும்.
  • தொளு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகிய அங்கக உரங்களை முடிந்த அளவு பயன்படுத்துதல்.
  • வரிசையாக கரும்புகளை விட்டம் கட்டவேண்டும்.
  • பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்குப் பொருளாக பயன்படுத்தக்  கூடாது.

உயிரியல் முறை:

  • டையப்போஅபிடிவோரா குடும்பத்தினைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை வயலில் வளரச் செய்யலாம்.       
  • பிவேரியா பாஸியானா, கிளாடாஸ்போரியம், ஆக்ஸிஸ்போரம், மெட்டாரைஸோபியம் அனிசோபிலே, வெர்டிசிலியம் லெகானி போன்ற உயிரிகளையும் ஒட்டுண்ணியாகப் பயன்படுத்தலாம்.
  • வயலில் என்கார்சியா பிளேவோஷ் கூட்டலம் விடவேண்டும்.

இரசயான முறை:

  • குளோர் பைரிபாஸ் 20 EC கரைசலினை 2 மி.லி/லி என்ற அளவில் எடுத்து விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடலாம். 
  • போரேட் 10 ஜி (நி) 5 கி.கி/ஏக்கர் அல்லது அசிப்பேட் 75 எஸ்.பி 1 கி/லி குளோர்பைரிபாஸ் 20 EC 2 மி.லி/லி,
  • மாலத்தியான் 50 EC 2 மி.லி/லி, டைமெத்தோயேட் 30 EC 1.7 மி.லி/லி ஆக்ஸிமெட்டான்மீதைல் 25 EC 1.3 மி.லி/லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கலாம். 
  • மாலத்தியான் 5% பொடியினை ஏக்கருக்கு 10 கி.கி என்ற வீதம் வயலில் இடலாம்.
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015