பயிர் பாதுகாப்பு :: இஞ்சி பயிரைத் தாக்கும் நோய்கள்
மென்மையழுகல் அல்லது கிழங்கு அழுகல் : பைத்தியம்  அப்ஹேனிடெர்மேட்டம் /பி.வெக்சன்ஸ்/பி.மைரியேடில்லம்

அறிகுறிகள்:

  • நோய் தாக்கம் முதலில் போலித் தண்டின் கழுத்துப்பட்டை பகுதியில் தொடங்கி பின் கீழ்நோக்கி பரவிவிடும். தாக்கப்பட்ட போலித்தண்டின் கழுத்துப்பட்டைப் பகுதிகளில் நீர் கோத்து மற்றும் அழுகல் வேர்க்கிழங்குகள் வரை பரவும் இது மென்மையழுகலுக்கான அறிகுறிகளாகும்
  • கடைசியில் வேர் தாக்கப்பட்டதும் கண்டறியப்படும்
  • இலை தொகுதி அறிகுறிகள் இளம் இலைகளின் முனையில் இளம் மஞ்சள் நிறமாக மாறி அது படிப்படியா இலைத்தாள்களுக்கு பரவும்
  • ஆரம்ப காலத்தில் நோய் தாக்குதல் இலைகளின் நடுப்பகதி பச்சை நிறமாகவே இருக்கும் ஆனால் இலை விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இலைகளில் உள்ள மஞ்சள் நிறம் செடிகள் முழுவதும் கீழ் பகுதியில் இருந்து மேற் பகுதி வரை பரவி அதன் தொடர்ச்சியாக வாடி வதங்கி போலித்தண்டுகள் காய்ந்து விடும்

தாக்கப்பட்ட இஞ்சி கிழங்கு அழுகல்
கட்டுப்பாடு:
  • விதை வேர்க்கிழங்கை 0.3% மேன்கோசெப்பில் பக்குவப்படுத்தும் 30 நிமிடங்களுக்கு முன் இந்தக் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதை விதைக்கும் முன் ஒரு முறை மறுபடியும் விதை நேர்த்தி செய்தால் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • நோயைக் கட்டுப்படுத்த  நன்கு வடி மண்ணை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். நீர் தேக்கத்தையும் முன்பே அகற்றி விட்டால் நோய் தாக்குதலில் இருந்து நாற்றுகளை பாதுகாக்கலாம்
  • வேர்க்கிழங்குகளை நோய் தாக்காத தோட்டத்தில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் விதை வழியாகவும் இந்நோய் பரவும்
  • ஒரு முறை இந்நோய் வயலில் தோன்றினால் உடனே  தாக்கப்பட்ட கொத்தை அகற்றி, 0.3% மேன்கோசெப்பை தாக்கப்பட்ட இடத்தை சுற்றியும் சொட்டு சொட்டாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் பரவுதலை தவிர்க்கலாம்.

Image Source

https://www.plantvillage.com/

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016