பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்
முன் பருவ இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா அரசிடிகோலா
அறிகுறிகள்

  • விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்நோய் தோன்றுகிறது.
  • இலைகளின் இரண்டு பக்கங்களிலும் வட்டமான கரும் பழுப்பு அல்லது கருப்புப்புள்ளி இருக்கும்.
  • கரும்புள்ளியைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும்.
  • அறிகுறிகள், காம்புகளிலும், தண்டுகளிலும் காணப்படும்.

கட்டுப்பாடு

  • கம்பு மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் போட்டால் இலைப்புள்ளி நோய் குறையும்.
  • இந்நோயின் தாக்குதல், அதிகம் காணப்படும் வயல்களில் மற்றும் பயிராக கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றை பயிரிட்டு நோய் கிருமிகளை அடுத்த பயிருக்கு பரவாமல் தடுக்கலாம்.
  • முந்தியப் பயிரின் கழிவுகளை ஆழமான உழுது, முதல் நிலை நோய்பரப்பும் காரணியைத் தடுக்கவேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

 

Oil Seeds Groundnut Infected Leaf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015