பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

கரிக்கோல் அழுகல் : மேக்ரோஃபோமினா பேஸியோலினா

அறிகுறிகள் :

  • இந்நோய்க் காரணி இளம் நாற்றுகளின் வேரை தாக்கக் கூடியது, நோயுற்ற பயிர் வாட்டத்துடன் காணப்படும். 
  • பலவீனமான பயிரின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிறமான கோடுகளுடன் காணப்படும். 
  • தண்டின் உட்புறம் காணப்படும் திசுவானது பழுப்பு நார் நாராக உரிந்து, சிறிய கருமையான கடுகு போன்ற ஸ்கிளிரோஷியாக்கள் ஆங்காங்கே காணப்படும். 
  • திசுப் பகுதி நார் நாராக பிரிந்து விடுவதால் தலைப்பகுதியானது பலவீனமான பகுதியில் ஒடிந்து காணப்படும். 
  • வேர்ப் பகுதியும் உரிந்து காணப்படும்.
நார் நாராக உரிந்த அடித்தண்டு

மேலாண்மை:

  • பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
  • பூக்கும் தருணத்தில் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சவும்.
  • ஊட்டச்சத்து அழுத்தம் தவிர்க்க வேண்டும்.
  • ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் 80 கிலோ / ஹெக்டர் பொட்டாஷ் பயன்படுத்துவதால் நோய் சேதாரம் குறைகிறது.
  • சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016