பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

பித்தியம் தண்டழுகல்: பித்தியம் அபெனிடெர்மேட்டம்

  • இந்நோய், சிக்கிம், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகாகர் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

அறிகுறிகள்:

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் அடி இடைக்கணு மிகவும் மென்மையாகவும். அடர் பழுப்பு நிறத்திலும் தண்ணீரில் மூழ்கினமாதிரி புள்ளிகள் தோன்றி, செடியை வளரவிடாமல் செய்கிறது.
  • சேதப்படுத்தப்பட்ட இடைக்கணு திருகிய தோற்றத்துடனும், செடியின் எல்லாவிதமான தண்டின் உள்பகுதி சேதம் ஆகும் வரை செடி உயிருடனும் இருக்கும்.
  • இதனை ஊடகத்தில் பிரிக்கும் போது பித்தியத்தையும், எர்வீனியா வித்தியாசப்படுத்துவது அவசியம்.

கட்டுப்பாடு:

  • வடஇந்தியாவில் ஜீலை 10 முதல் 20க்குள் நடவு மேற்கொள்ளவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு செடியின் எண்ணிக்கை 50,000 இருக்குமாறும் காத்தல்வேண்டும்.
  • வயலில் தண்ணீர் நன்கு வடியுமாறு காத்தல் வேண்டும்.
  • முந்திய  பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
  • கேப்டான் என்ற மருந்தை 1 கிராம் / 100 லிட்டர் என்ற அளவில் அடிக்கணுவில் மண்ணில் தெளிக்கவேண்டும்.
  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான - கங்கா, சேபெட் 2 பயிரிடலாம்.

 

Maize

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014