பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பட்டைத் துளைப்பான்: இன்டார்பெலா டெட்ரானிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:

  • பட்டை துளைப்பான் இளம் வயது மரங்களை அதிக அளவில் தாக்குகிறது.
  • புழு மரப்பட்டையை துளைத்து உள்ளே சென்று வலைப்பின்னலை உருவாக்கி உணவுக் கடத்தும் திசுவை உண்கிறது.
  • புழு இரவு நேரங்களில் மட்டும் மரப்பட்டையை உண்ணுகிறது பகல் நேரங்களில் மரத்துளைகளில் மறைந்து வாழ்கிறது.

பூச்சியின் விபரம்:

  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • வண்டு - மஞ்சள் நிறமுடையது முன் இறக்கையில் பழுப்பு நிற கோடும், பின் இறக்கையில் வெண்ணிற பட்டைக்கோடு இருக்கும்.
  • ஆண் வண்டு சிறியதாகவும் பெண் வண்டு பெரியதாகவும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • மரத்தில் பூச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த கிளைகளை அகற்றிவிட வேண்டும்.
  • மாற்று புரவலன், இளவபஞ்சு மற்றும் இதர புரவலன்கள் நீக்க வேண்டும்.
  • தாங்கி வளரும் மா ரகங்களை அதாவது நீலம், ஹீமாயுதீன் போன்ற ரகங்களை வளர்க்க வேண்டும்.
  • வண்டுகள் முட்டையிடும் நிலையை தடுக்க, நிலகரி தார் + மண்ணெண்ணெய் @ 1:2 அல்லது கார்பாரில் 50 wp 20 கிராம் /ட (அடித்தள பகுதி – 3 அடி உயரம்) தடவவும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 10 மில்லி 2.5 செ.மீ பருத்தி துணியில் நனைத்து/மரத்திற்கு கொடுக்க வேண்டும்.
  • பாதிப்பு அதிகமாக இருந்தால் மரத்தின் தண்டு மீது காப்பர் ஆக்ஸிகுளோரைடு தடவி விட வேண்டும்.
  • துளை ஒன்றுக்கு கார்போபியூரான் 3 கிராம் 5 கிராம் என்ற அளவில் செலுத்தி மண்ணை கொண்டு துளையை அடைக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016