பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
பாக்டீரியா இலைக்கருகல் நோய்: சேந்தோமோனாஸ் ஒரைசே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
  • இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்கநிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும்.
  • அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும்.
  • தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும்.
  • 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.
  • நோய் வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்:
    • களைகளின் இருப்பு.
    • நெற்பயிர் துார்கள் மற்றும் தாக்கப்பட்ட கட்டைப் பயிர்கள்.
    • நெற்பயிரிலும் மற்றும் பாசன வாய்க்காலிலும் நுண்ணுயிர் தாக்கம்.
    • சூடான வெப்பநிலை (25-30 செ), அதிக ஈரப்பதம், மற்றும் மழை.
    • அதிக காற்று வீசினால் காயங்களை ஏற்படுத்தும் மற்றும் மிகுந்த உரமளித்தல் பாசன நீர் மற்றும் சிதறல் அல்லது காற்றுடன் கலந்த மழை ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்புகிறது.
    • நடவு செய்வதற்கான சீராக்கும் கருவி மற்றும் அதனை நடவின் போது கையாளும் விதம் ஆகியவை கூட புதிய தாக்குதல் ஏற்பட காரணமாய் உள்ளன.
           
  இலையின் ஓரத்தில் அலை போன்ற வெட்டு   பாக்டரிய நீர் கசிவு   பாதிப்படைந்த பயிர்      

நோய்க் காரணி:

  • உருளையாக, 1.2 x 0.3 - 0.5 மீட்டர் அளவு கொண்டது. இவை தனித்தும், சில சமயம் இணைந்தும் காணப்படும். ஆனால் தொடர்ந்து இருக்காது.
  • இந்நோய்க்காரணிகள் கிராம் எதிர் விளைவுடையவை. பூசணவித்துக்கள் உருவாக்கம் இன்றியும் கனி அறை இன்றியும் காணப்படும்.
  • ஊட்டச்சத்து கடற்பாசியில் இருக்கும் கூட்டுயிரிகள் வெளுத்த மஞ்சுள் நிறத்துடனும் வட்ட வடிவத்திலும், மென்மையான ஓரத்துடனும், காணப்படும்.
  • இவை குவிந்த உருவம் மற்றும் ஒட்டும் இயல்புடையது.

கட்டுப்பாடு:

  • நோய் தாங்கும் திறனுள்ள இரகங்களை பயிரிடுதல் (ஐஆர் 20, ஐஆர் 72, பொன்மணி, டிகேஎம் 6)
  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தனிமையான மேட்டுப்பாங்கான சூழ்நிலையில் நாற்றாங்கால்களை அமைத்தல்.
  • பயிர் நடவு செய்யும்போது நாற்றுக்கள் கத்திரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சரி விகித உரமளித்தல், மிகுதியான தழைச்சத்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கதிர்ப் பருவத்தில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளிப் போட வேண்டும். வயலில் நீரை வடிகட்ட வேண்டும் (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர).
  • களைகளை மற்றும் மாற்று பயிர்களை அழித்தல்.
  • நோய்த் தாக்கப்பட்ட வயலிலிருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • முறையான பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும்.
  • பிளீச்சிங் பவுடர் (100 கிராம்/லிட்டர், துத்தநாக சல்பேட் (2%) உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • அக்ரிமைசின் (0.025%), நனையும் செரிசன் (0.05%) உடன் விதை நேர்த்தி செய்து பின் அதனைத் தொடர்ந்து வெந்நீரில் (52-54° செ) 30 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்து வெந்நீர் நேர்த்தி செய்யவேண்டும்.
  • செரசன்(0.1%) என்ற அளவில் 8 மணி நேரம் விதைகளை ஊற வைத்து பின், ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/லிட்டர் நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • 3% வேப்பெண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்க வேண்டும்.
  • பசுமையான மாட்டுச் சாண சாறை நுண்ணுயிரி அழுகல் நோயைக் கட்டுபடுத்துவதற்காக தெளித்தல்.
  • 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, அதனை படியவிட்டு பின் வடிகட்ட வேண்டும்.
  • நன்கு வடிகட்டிய திரவத்தைப் பயன்படுத்த வேண்டும். (நோய் முதல் அறிகுறி தோன்றியவுடனும், இரண்டு வார கால இடைவெளி விட்டு தெளிக்கவேண்டும்).
  • ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் + காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப் பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம்.
  • பிளீச்சிங் பவுடர் @ 5 கிலோ/எக்டர் என்ற அளவில் பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.
  • தாமிர பூசணக் கொல்லிகளை(அ) ஸ்ட்ரெப்டோசைக்லின் (250 பிபிஎம்) உடன் இலைவழி மூலம் அளித்து இரண்டாம் நிலை நோய் பரவலை தடுக்கலாம்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016