பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர்நாவாய் பூச்சி: கலோகொரிஸ் அங்குஸ்ட்டேட்டஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் பால் பிடிக்கும் தருணத்தில் கதிரை தாக்கி சேதம் விளைவிக்கும்
  • தாக்கப்பட்ட கதிர்கள் மணி பிடிக்காமல் இருக்கும்
  • கதிரைத் தட்டினால் ஏராளமான குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் ஓடுவதைக் காணலாம்
 
  பதறுகள் சோளத்தில் துவாரங்கள் நிறம் மாறிய தானியங்கள்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையானது இலையின் திசுக்கலில் இடப்பட்டு, வெள்ளை நிற மாவுப்பூச்சியால் மூடப்பட்டிருக்கும்
  • குருத்துப் பூச்சி: மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், கண்ணாடி போன்ற இறகுகளைக் கொண்டிருக்கும்
   
  முட்டை புழு கூட்டுப்புழு பூச்சி  

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 10/கதிர்

  • கதிர் உருவாகிய 3 வது மற்றும் 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினைத் தெளிக்கவும்
    • கார்பரில் 10 D 25 கிலோ/ ஹெக்டேர் 
    • மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர் 
  • வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம ்பாசலோன்
  • மாலத்தையான் 50 EC 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்
Source of images:
http://www.ikisan.com/tn-sorghum-insect-management.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015