பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத்துளைப்பான்: ஓபெரியா பிரிவிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட தண்டுகளில் வளையம் காணப்படும்.
  • புழு தண்டினுள் நுழைந்து உட்சென்று தின்று சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் காய்ந்த விடும்.
  • சேதம் அதிகமாகும் போது முழு செடியும் காய்ந்து மடிந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • புழு - வெள்ளையாகவும்,தலைப்பகுதி கருமையாகவும் இருக்கும்.
  • தண்டுத்துளைப்பான் - மஞ்சள் நிறமாக இருக்கும். தலைபகுதி பழுப்பு நிறமாக இருக்கும்.
soyabean

கட்டுப்பாடு

  • கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.
  • பரிந்துரை செய்யப்பட்ட விதை அளவை பயன்படுத்த வேண்டும்.
  • ஊடுபயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பயிர்சுழற்சி முறையை கையாள வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தாக்கப்பட்ட பகுதிகளையும், முட்டைக்குவியலையும் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • போரேட் 10 கிலோ அல்லது கார்போப்யூரான் 30 கிலோ தூளை விதைப்பின் போது தூவ வேண்டும்.
  • குயினால்பாஸ் (அ) ட்ரைசோபாஸ் 12 மிலி மருந்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015