பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டு ஈ: மெலனோகுரோமைசா சோஜாயி
தாக்குதலின் அறிகுறிகள்

  • முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு தண்டினை வளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட தண்டுகளில் இளம்சிவப்பு நெலிந்தக் கோடுகளும், கூட்டுப்புழுவும் காணப்படும்.
  • சேதம் அதிகமாகும் நிலையில் புழு நுனி வேர்வரை சென்று சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட செடிகள் மடிந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • புழு - வெள்ளை நிறமாக இருக்கும்.
  • ஈ - சிறியதாக, கருமை நிறமுடையது.
crop Protection

கட்டுப்பாடு

  • கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.
  • பரிந்துரை செய்யப்பட்ட விதை அளவை பயன்படுத்த வேண்டும்.
  • ஊடுபயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பயிர்சுழற்சி முறையை கையாள வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தாக்கப்பட்ட பகுதிகளையும், முட்டைக்குவியலையும் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • போரேட் 10 கிலோ அல்லது கார்போப்யூரான் 30 கிலோ தூளை விதைப்பின் போது தூவ வேண்டும்.
  • குயினால்பாஸ் (அ) ட்ரைசோபாஸ் 12 மிலி மருந்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015