பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைக்கருகல்: செர்கோஸ்போரா கிகுச்சி

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்தும், அடர்ந்த, சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
  • தீவிரமாக  பாதிக்கப்பட்ட வெளிர் நிறத்திலும், இறந்த திசுக்களைக்கொண்டும், இறுதியில் உதிர்ந்த விடுகின்றன.
  • இலைகளின் காம்புகளில் சிவப்பு நிறமாற்றம் தோன்றி உதிர்ந்து விடுகின்றன.
  • பின்னர் இளம், மேல் இலைகள் காய்ந்து, இறுதியில் வயல் முழுவதும் காய்ந்து போன தோற்றம் காணப்படுகின்றன.
கட்டுப்பாடு
  • நல்ல, தரமான விதையை உபயோகிக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை அழிக்கவேண்டும்.
  • விதையை ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் (2.5 கிராம் / 10 கிலோ விதை) என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும்.
  • காப்பர் பூசணக்கொல்லி 2 கிராம் / லிட்டர் அதனுடன் ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் தெளிக்கவேண்டும்.
  • முந்தியப் பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
  • விதையை திரம் + கார்பன்டாசிம் (2:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் விதைநேர்த்தி செய்யலாம்.
  • மேங்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் / லிட்டர் அல்லது கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015