பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

ரைசக்டோனியா இலைக்கருகல் : ரைசக்டோனியா சொலனி

அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட விதைகளில் ஒழுங்கற்ற வடிவ, சாம்பல் (அ) பழுப்பு நிற நீரில் அமிழ்ந்து போன்ற புள்ளிகள் காணப்படும்
  • இலைகளில் ஆரம்பத்தில் நீரில் அமிழ்ந்த புள்ளிகள் தோன்றும். பின் இவை பச்சை கலந்த பழுப்பு நிறம் (அ) சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும்
  • தாக்குதல் அதிகமாகும் போது, பழுப்பு (அ) கருப்பு நிறமாக மாறும்
  • அதிக மழை (அ) அதிக ஈரப்பதம் நிலவும் காலங்களில், வலை போன்ற மைசிலிங் வளர்ச்சி இலைகளின் மீது தோன்றும்
  • இலைகள் மற்றும் இலைக்க காம்புகளின் மீது அடர் பழுப்பு நிற ஸ்க்ஸிரோசியா உருவாகும்
  • நோய்க் காரணி மண்ணில் வாழும்
  • ஈரப்பதம் மற்றும் குளிர் வானிலை (24-32°C) சாதகமானது
கட்டுப்பாடு
  • அடர்த்தியாக பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்
  • பயிர் குப்பைகளை அறுவடைக்குப்பின் முழுவதுமாக அகற்ற வேண்டும்
  • திரம் +கார்பண்டசிம் (2:1) 3 கிராம் /கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்ய வேண்டும்
  • மான்கோசெப் (அ) தாமிர பூஞ்சானக் கொல்லி 2.5 கிராம்/ லி (அ) கார்பண்டசிம், 1கிராம்/ லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

Soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015