பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

நுனித்தண்டுத் துளைப்பான்: சிரிப்போபேகா எக்சர்ப்்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலையின் நடுப்பகுதியைத் துளைத்து உட்சென்று குருத்தை அடைகின்றது
  • தாக்கப்பட்ட இலைகளின் நடுப்பகுதியில் சிறு சிறு துவாரங்கள் காணப்படும்
  • புழுக்கள் குருத்துக்களை தாக்கி அழிப்பதால் நடுக்குருத்து காய்ந்துவிடும்
  • நுனிக்குருத்தில் பூச்சியினால் துளைக்கப்பட்ட துளைகள் காணப்படுவதோடு, கரும்பின் நுனியில் கிளைப்புகள் தோன்றி பார்ப்பதற்கு முடிக்கொத்துப் போல் தோன்றும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: மேல் சோகையின் அடிப்புறம் நடுநரம்பின் அருகில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் . இம்முட்டைக் கூட்டங்கள் ரோமங்களால் சூழப்பட்டிருக்கும். 10-80 முட்டைகள் வரை ஒரே கூட்டமாகக் காணப்படும்.
  • இளம்புழு: வெள்ளை நிற மென்மையான உடலில் சிகப்பு நிற கோடு நடுவே காணப்படும். இதன் தலை மஞ்சள் நிறமாக இருக்கும். கூடானது புழு வெளியேறக்கூடிய ஒரு பக்க துளையுடன் கட்டப்பட்டிருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 6-21 நாட்கள்.
  • பூச்சி: வெள்ளை நிறமாகவும், வயிற்றுப்பகுதிக்கு கீழ் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் பெண் பூச்சியில் கொத்தாக காணப்படும்

கட்டுப்பாடு:

  • கூட்டுப்புழு ஒட்டுண்ணியான கேம்பிராய்டஸ் (ஐசோதிமா) ஜாவென்சிஸை 100 ஜோடிகள்/ஹெ என்ற அளவில் வயலில் விடலாம்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
    • கார்போபியுரான் 3% G 33.3 கி.கி/ஹெக்டர்
    • குளோரோடேரேநிலிபுருள் 18.5% SC 375 மி.லி/ஹெக்டர்
    • போரேட் 10 % G 30 கி.கி/ஹெக்டர்
இலைகளின் நடுப்பகுதியில் சிறு சிறு துவாரங்கள்
நடுக்குருத்து காய்தல

முட்டை

புழு பூச்சி

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015