பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்
புல்தண்டு நோய்:
அறிகுறிகள்:
  • கரும்பின் 3-4  மாத பயிரில் ஒரு கிளைப்பில் உள்ள குருத்து சோகைகள் மட்டு வெண்மையாகவும் அதற்குக் கீழ் உள்ள சோகைகள் பசுமையாகவும் காணப்படும்
  • பின் இத்துாரின் கீழ் வெண்மையான அல்லது வெளிர் மஞ்சள் சோகைகளுடன் கூடிய அளவுக்கதிகமான கிளைப்புகள் மெலிந்த சிம்புகள் போன்று கிளம்பும். 
  • சோகைகள் சிறுத்தும், குறுகியும் காணப்படும்.  நோய் தாக்கிய துாரில் சில சமயங்களில் ஒன்றிரண்டு கரும்புகள் நன்கு வளர்ந்து பசுமையான சோகைகளுடன் நல்ல கரும்பு மாதிரியே காணப்படும். 
  • பச்சையம் இல்லாமல் இச்சோகைகள் காய்ந்து விடும்.  பாதிக்கப்பட்ட கரும்பின் வளர்ச்சி குன்றி விடும். இடைக்கணுக்களின் நீளம் குறைந்து காணப்படும்.
   
  வெள்ளை இலைகள் மிகுந்த உற்பத்தியைப் துார்கள் வளர்ச்சி குன்றிய இடைகன்றுகள் புல்தண்டு  
நோய்க்காரணி:
  • இந்த நோய் மைக்கோ பிளாஸ்மா கிருமிகள் மூலம் இலைகளிலுள்ள உணவுக் குழாய்களில் இருந்து உண்டாகின்றது. மைக்கோ பிளாஸ்மா உயிரணு சிறியதாகவும், 1 மை.மீ. அளவு குறைவாகவும் இருக்கும், இதை நுண்நோக்கி மூலம் காண்பது கடினம்.

கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • விதைத்த 2 வாரங்களில் இந்நோய் தென்பட்டால், பாதிக்கப்பட்ட நாற்றுகளை அகற்றிவிட்டுப் புதிய கன்றுகள் நடவும்.
  • பிடுங்கப்பட்ட நோய் தாக்கிய கன்றுகளைப் எரித்து விட வேண்டும்.
  • கோ 86249, கோ.ஜி 93076 மற்றும் கோ.க 22, போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை வளர்க்கலாம்.
  • புல்தண்டு நோய் பாதிப்பு 15% மேல் இருக்கும்போது மறுதாம்புப் பயிர் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இயற்பியல் முறைகள்:

  • பாதிக்கப்பட்ட பயிர்களை மறுதாம்பு பயிர் மற்றும் நாற்றங்காலிலிருந்து அகற்றி விட வேணடும்.
  • விதைக் கரணைகளை நீராவிக் காற்றில் 50° செ 1 மணி நேரம் வெப்ப நேர்த்தி செய்து, கரணையிலுள்ள நோய்க்கிருமிகளை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

வேதியியல் முறை:

  • மெத்தில்டெமட்டான் 2 மி/லி மருந்தினை இடுவதால் அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம்.
  • டைமெத்தோயேட் @ 1 மி.லி 1 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
Content validators: 
Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007. 
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015