பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

சார்கோல் அழுகல்: மேக்ரோபோமினா பேசியோலினா

அறிகுறிகள்
  • செடிகள் திடீரென்று காய்ந்து விடும்
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள், காய்ந்தும், தண்டின் அடிப்பகுதியில் கருப்பு நிற கோடுகளும் காணப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிய ஸ்கிலிரோசியஸ் காணப்படும்.
  • சில நேரங்களில் நாற்றழுகல், வேரழுகல்  காணப்படும்.

கட்டுப்பாடு

  • கோடையில் ஆழமாக உழுதல், பயிர்  சுழற்சி முறையை மேற்கொள்ளுதல்.
  • மண்ணுடன் தொழுஉரம் 12.5 டன் / எக்டர் என்ற அளவில் கலந்து இடவும்.
  • முந்திய பயிரின் கழிவுகளை அழிக்கவும்.
  • கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் அல்லது சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் / டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர்  என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இடுதல் ஆகியன கட்டுப்பாட்டை கொடுக்கும்

 

Sunflower

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016