பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எரிசிபெ கைகோரெசியாரம் வகை நிக்கோட்டியானே
அறிகுறிகள்

  • முதலில் சாம்பல்நிறம் கலந்து வெண்மையான புள்ளிகள் கீழ் இலையின் அடிப்பாகத்தில் காணப்படுகிறது.
  • குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக குளுமையான நேரத்தில் இப்புள்ளிகள் மேல் இலைகளுக்க பரவி இலை முழுவதும் காணப்படுகிறது.
  • இவ்வாறான இலைகள் பதப்படுத்தப்படும் போதும் எரிந்தும் பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
சாம்பல் நோய்

கட்டுப்பாடு

  • அதிகமான உரம் மற்றும் அதிகமாக செடிகளைத் தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட அடி இலைகளை அகற்றவும்.
  • சற்று முன் பருவத்திலேயே நடவு செய்யவேண்டும்.
  • கந்தகத் தூளை 40 கிலோ / எக்டர் என்ற அளவில் சாம்பல் அல்லது மணலுடன் கலந்த நட்ட 6 முதல் 8 வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.
  • 0.2 சதவிகிதம்  கராத்தேன் அல்லது தியோவிட் அல்லது 0.05 சதவிகிததம்  கார்பன்டாசிம் ாநய் உருவாகும் முன் 10-12 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
  • நோய் எதிர்ப்புத்தன்மை உடைய இரகங்களான ஸ்வர்ணா அல்லது லைன் 2359 பயிரிடலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015