பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

பழுப்பு இலைப்புள்ளி நோய்: அல்டர்னேரியா லாங்கிபஸ்
அ.டெனுயிஸ் அ.அல்டர்னேட்டா

அறிகுறிகள்

  • இந்நோய் நடவு வயலில் அதிகமாக காணப்படுகிறது.
  • இந்நோய் அடியில் உள்ள இலைகளிலும் பின்பு முதிர்ந்த இலைகளிலும் சிறிய பழுப்பு நிற கோடுகளாக காணப்படுகின்றன. இவை மேல் உள்ள இலைகளுக்கும் இலைக்காம்புக்கும், காய்களுக்கும் பரவுகின்றன.
  • வெப்பமான காலநிலையில், அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் இப்புள்ளிகள் பெரியதாக பழுப்பு நிறமாக மாறி வெளிப்புற கோடுகளை தேரற்றுவிக்கின்றன.
  • அதிகமாக பாதிக்கப்பட்ட இலைகளில் புள்ளிகள் பழுப்பு நிறமாகவும், பெரியதாகவும் மாறுகின்றன.
  • முதிர்ந்த நிலைகளை அடையும் இலைகளில் இலைப்புள்ளிகள் அடர்ந்த மஞ்சள் நிறத்தை புள்ளியைச் சுற்றிலும் தோற்றுவிக்கின்றன. இதற்கு காரணம் அல்டரின் எனப்படும் ஒரு வகை நச்சுத்தன்மை உடைய பொருளை இப்பூஞ்சான் உற்பத்திசெய்வதால்.

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட செடிகளை முதலில் அகற்ற வேண்டும்.
  • அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில் மீண்டும், மீண்டும் புகையிலை விளைவிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பூசணக்கொல்லியான மேனப் 0.2% வாராவாரம் தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.



Tobacco

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015