பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

தேமல் நோய்: புகையிலை தேமல் நச்சுயிரி
அறிகுறிகள்

  • இலைகளில் அடர்பச்சை நிறமும் வெளிர்ப் பச்சை நிறமும் கொண்ட பகுதிகளில் தோன்றுவதால் தேமல் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இலைப்பாகம் சிறுத்துவிடும். இலைகள் அடிப்பாகத்தை நோக்கிச் சுருண்டிருக்கும்.
  • பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். இலைப்பரப்பு சிறுத்தும் பெருத்தும் உள்ள ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்ட இலைகள் தோன்றும்.
  • இலையின் நடுநரம்பிலிருந்து இருபுறத்திலும் ஒரு பகுதி சிறுத்தும் ஒரு பகுதி பெருத்தும் இருப்பதோடல்லாமல் சில இலைகளில் இலைப்பரப்பு முழுவதுமே வளராமல் நரம்பு மட்டும் காணப்படும். இத்தோற்றம் எலிவாலின் அமைப்பைப் போன்றிருக்கும்.
  • நோய் கண்ட செடியின் பாகங்கள் நிலத்தில் தங்கியிருப்பதால் அவற்றின் நச்சுயிரிகள் தங்கியிருக்கும் காய்ந்த செடியின் பாகங்களிலும் 25 ஆண்டுகள் வரை தங்கியிருந்த நோயினைப் பரப்பும் ஆற்றலுள்ளவை.
  • நிலத்தில் பணியாற்றுபவர்கள் மூலமும் கருவிகள் மூலமும் நோய் கண்ட செடிகளிலிருந்து பிற செடிகளுக்குத் தோன்றுகின்றன.
  • நச்சுயிரி காய்ந்த புகையிலை, சுருட்டு, சிகரெட் போன்றவற்றிலும் கூட அழியாமல் இருந்து பிற இடங்களுக்குப் பரவுகின்றன.
  • செங்கிழங்கு சீமை அவரை, தக்காளி, கத்தரி, ஊமத்தை, மிளகரய், மணத்தக்காளி, பெட்Þனியா மற்றும் பல செடிகளையும் இந்நச்சுயிரி எளிதில் தாக்குகின்றது.
  • இலையின் நடுநரம்பிலிருந்து இருபுறத்திலும் ஒரு பகுதி சிறுத்தும் ஒரு பகுதி பெருத்தும் இருப்பதோடல்லாமல் சில இலைகளில் இலைப்பரப்பு முழுவதுமே வளராமல் நரம்பு மட்டும் காணப்படும். இத்தோற்றம் எலிவாலின் அமைப்பைப் போன்றிருக்கும்.
  • நோய் கண்ட செடியின் பாகங்கள் நிலத்தில் தங்கியிருப்பதால் அவற்றின் நச்சுயிரிகள் தங்கியிருக்கும் காய்ந்த செடியின் பாகங்களிலும் 25 ஆண்டுகள் வரை தங்கியிருந்த நோயினைப் பரப்பும் ஆற்றலுள்ளவை.
  • நிலத்தில் பணியாற்றுபவர்கள் மூலமும் கருவிகள் மூலமும் நோய் கண்ட செடிகளிலிருந்து பிற செடிகளுக்குத் தோன்றுகின்றன.
  • நச்சுயிரி காய்ந்த புகையிலை, சுருட்டு, சிகரெட் போன்றவற்றிலும் கூட அழியாமல் இருந்து பிற இடங்களுக்குப் பரவுகின்றன.
  • செங்கிழங்கு சீமை அவரை, தக்காளி, கத்தரி, ஊமத்தை, மிளகரய், மணத்தக்காளி, பெட்Þனியா மற்றும் பல செடிகளையும் இந்நச்சுயிரி எளிதில் தாக்குகின்றது.

கட்டுப்பாடு

  • அறுவடையிலும் நோய் கண்ட செடியின் பாகங்கள் நிலத்தில் தங்கவிடாது அப்புறப்படுத்தி எரித்து விடுதல் சிறந்தது.
  • நோயுண்ட செடியைத் தொட்டபின் பிற செடிகளைத் தொடாமலிருப்பதன் மூலமும், கைகளைச் சோப்பினைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல் மூலமும் நோய் பரவுவதைக் குறைக்கலாம். இந்நோய் தோன்றும் களைச் செடிகளை முழுவதுமாக அழிக்க வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை 2 வருடத்திற்கு கடைபிடிக்க வேண்டும்.
  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை டிஎம்விஆர்ஆர் - 2 மற்றும் டிஎம்விஆர்ஆர் - 3, டிஎம்விஆர்ஆர் - 2எ போன்ற இரகங்களை பயன்படுத்தலாம்.

 

 

Tobacco


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015