பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

புகையிலையின் இலைச்சுருட்டை நோய்: புகையிலை இலைச்சுருட்டை நச்சுயிரி

அறிகுறிகள்

  • நோயினால் பாதிக்கப்பட்ட செடி குட்டையாக இருக்கும். இலைப்பரப்பளவு பெருகாமல் சிறுத்து விடுவதுடன் சுருக்கமுற்றுக் காணப்படும்.
  • இலையின் ஒரு பகுதியோ முழுதுமோ சுருட்டையாகியிருக்கும்.
  • இலைகள் தடித்து ஒடியும் தன்மையுடையதாகவும் இலைகளின் ஓரங்கள் கீழ்நோக்கிச் சுருண்டும் இருக்கும்.
  • இலை நரம்புகள் அடர்பச்சையாகவும் பெருத்தும் காணப்படும்.
  • இலை நரம்புகளின் அடிப்பாகத்தில் வெளி வளர்ச்சியும் காணப்படும்.

கட்டுப்பாடு

  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் நாற்றுக்களை வயல்களில் பார்த்தவுடன் களைந்தெரிய வேண்டும்.
  • நோய் தாக்காத ஆரோக்கியமான நாற்றுக்களை வைத்து இடத்தை நிரப்ப வேண்டும்.
  • அதிகமான நோய் தாக்கிய இடங்களில் சணப்பையை வேளிப்பயிராக பயிரிட வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு பண்ணிரெண்டு மஞ்சள் பொறியை (ஆமணக்கு எண்ணெய்யை தடவி) பொருத்த வேண்டும்.
  • முதல் தெளிப்பு : குளோர்பைரிபாஸ் 20% @ 25 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
  • இரண்டாவது தெளிப்பு : மோனோகுரோட்டோபாஸ் 36% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • மூன்றாவது தெளிப்பு : அசிடேட் 75% @ 10 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • நான்காவது தெளிப்பு : டெமட்டான் - எஸ் மீதைல் 25% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • மாலை நேரங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.



Tobacco Tobacco

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015