பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்

புகையிலைககாளான்:

  • ‘பேய்க் காளான்’ என்று ஆங்கில மொழி பேசும் நாடுகளிலும், ‘டோக்ரா’ என்று வட இந்தியாவிலும், ‘வகும்பா’ என்று குஜராத்திலும், ‘பாம்பாக்கு’ என்று மகாராஷ்டிராவிலும், ‘புகையிலைக் காளான்’ என்று தமிழ்நாட்டிலும், ‘போடு’ அல்லது ‘மல்லே’ என்று ஆந்திரப் பிரதேசத்திலும் அழைக்கப்படுகிறது.
  • பூக்கும் ஒட்டுண்ணியாக புகையிலைப் பயிரின் வேர்களில் இருக்கும். இந்தியாவின் அனைத்து புகையிலைப் பயிரிடும் பகுதிகளிலும் காணப்படும்.
  • இது ஒரு முழு ஒட்டுண்ணி. இதற்கு தேவையான உணவை புகையிலைப் பயிரின் வேரிலிருந்து உறிஞ்சுறுப்புக்கள் மூலம் எடுத்துக் கொள்கிறது.
  • விளைச்சலில் இழப்பு இலையின் தரம் 30-70 சதவீதம் தமிழ்நாட்டிலும், 10-50 சதவீதமாக மாற்ற மாநிலங்களிலும் இருக்கிறது
  • சி.டி.ஆர்.ஐ. ராஜமுத்திரியில் நடத்தப்பட்ட சோதனையில் தாக்கத்தின் காலம் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 20-50 சதவீதம் விளைச்சல் இழப்பு ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது.

 

அறிகுறிகள்

  • ஆரம்ப காலத் தாக்குதலில், இலைகள் வாடி, தலைகுனிந்து நிற்கும்.
  • 5 முதல் 6 வார காலப் பயிர்களில், இந்தக் காளான் புகையிலைப் பயிரின் அடிப்பகுதியிலிருந்து வெளிவர ஆரம்பிக்கும் .
  • எண்ணற்ற காளான் குருத்துக்கள் பயிரைச் சுற்றித் தோன்றும்.
  • குட்டையான வளர்ச்சியுடன், இலைகள் வாட ஆரம்பிக்கும். பயிரின் கடைசி பருவத்தில் தாக்குதல் இருந்தால் அறிகுறிகள் தெரியாது. ஆனால் விளைச்சல் மற்றும் இலையின் தரம் குறைந்து காணப்படும்.
  • 15-45 செ.மீ உயரத்துடன், வெளிர் பழுப்பு அல்லது ஊதா நிறத்துடன் கொத்தாகத் தோன்றும்.
  • 10 முதல் 15 குருத்துக்கள் ஒரு ஊன் வழங்கியின் வேரைச் சுற்றி இருக்கும்.
  • இந்தியாவில் 2 வகைகள் உள்ளன. முறையே ஒரபாங்கி செர்னூவா, ஒரபாங்கி இண்டிகா.
  • ஒரபாங்கி செர்னூவா மிகவும் மோசமான ஒட்டுண்ணி, சொலானே சியஸ் பயிர்களை மட்டும் தாக்கும்.
  • இந்த குடும்பத்திலுள்ள மற்ற ஒம்புயிரிகள் - உதாரணமாக, கன்னாபின்னாஸியே, கம்போஸிட்டே, யூஃபோர்பியேஸே, டில்லியஸியே.
  • கேப்ஸிகப் ஆனம் (மிளகாய்), டிரைடாக்ஸ் புரொகம்பன்ஸ் இந்த காளான் விதைகளின் முளைப்பை ஒட்டுண்ணியாக இல்லாமலேயே ஊக்குவிக்கிறது.

கட்டுப்பாடு

  • நோய்க்கிருமி உண்டாவதற்கான சாத்தியத்தைத் தடுக்க வேண்டும்.
  • இளம் காளான் குருத்துக்களை விதை வருவதற்கு முன்பே, வாரம் ஒரு முறை கைகளால் பிடுங்கி விட வேண்டும்.
  • இவ்வாறு செய்வதால் இதன் அடர்த்தி 2 வருடத்தில் 85 சதவீதமும், 4 வருடத்தில் 96 சதவீதமும் குறைக்கப்படுகிறது.
  • அவ்வப்போது வெளிவருகிற காளான்களை கைகளால் பிடுஞ்கி விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 4 வருடத்திற்கு செய்யும் போது இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • புகையிலைப் பயிரைத் தொடர்ந்து சோளம் அல்லது எள் பயிரை காரிப் பருவத்தில் பயிரிட வேண்டும்
  • ஆனால் மிளகாய் வலைப் பயிராக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸினாபிஸால்பாவை புகையிலைப் பயிர்க்கு முன் பயிரிடுவதால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.
  • காலம் தள்ளி பயிரிடுவதாலும் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் மண்ணின் ஈரப்பதம் குறைவதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015