பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்
கிளைக்கருகல் நோய்/தண்டு சொறிமேக்ரோபோமா  தேயிகோலா

சேதத்தின் அறிகுறி:

  • முதல் அறிகுறியாக   பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பாக   மாறி  பின்பு  இலைகள் தொங்கிவிடும்.
  • இலைகளில் நோய் பரவும் பொழுது கிளைகள் உலர்ந்த இறந்துவிடும்.
  • நோய் தண்டிற்கு பரவி  உலர்ந்து இறந்து  போகும்.
  • முழு கிளையும்  முனையிலிருந்து கீழ் வரை  இறந்து  போகும்.
  • இறந்த   கிளைகள் பிளவு  அடைந்து  , தடித்த மேலோட்டமான பட்டை பகுதியில் சூழப்பட்ட புண்களை உருவாக்குகிறது .
பழுப்பாக மாறிய இலைகள் காய்ந்த இலைகள் தண்டு சொறி பாதிக்கப்பட்ட தோட்டம்
வாழ்க்கை சுழற்சி:
  • பூஞ்சை சிறிய, வட்ட  வடிவிலான பிக்னிடியா வித்திகளை இறந்த கிளைகள் மீது உருவாக்குகிறது .
  • பூஞ்சை வித்திகள் மழை மூலம்  பரவுகிறது மற்றும் நிலத்தில்  இருக்கும்  சீரமைக்கப்பட்ட கிளைகளில் சில வாரங்கள் வாழ முடியும்.
  • பூஞ்சை வழக்கமாக காயமடைந்த தாவர திசு  மூலம்  நுழைந்து தொற்றை ஆரம்பிகிறது .

கட்டுப்பாட்டு:

  • நல்ல வடிகால் கொண்ட அமில மண்ணில் செடிகளை விதைக்கவும்.
  • துருப்பிடித்த பகுதிகளிக்கு கீழே உள் கிளைகளை நிக்கி தகுந்த கிருமிநாசினி முலம் நோயை அழிக்க வேண்டும்.
  • உரிய பாதுகாப்பு பூசண கொல்லிகளை ஈரமான வானிலை அல்லது இயற்கை இலை துளி காலங்களில் தெளித்து இந்நோயை கட்டுபடுத்தலாம்.   

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Image source:

Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015