பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்றழுகல்:

அறிகுறிகள்

  • நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
  • முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
  • முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
  • முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.
ஆரோக்கியமான தாவரம் பாதிக்கப்பட்ட தாவரங்கள் பாதிக்கப்பட்ட நாற்று

மேலாண்மை

  • உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
  • தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
  • டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
  • மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016