பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் தண்டு அழுகல்: பித்தியும் அப்பேனிடெர்மேட்டம்

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடித்தண்டு பகுதியில் நீர் கசிந்து மென்மையாக காணப்படும்.
  • வேர் அமைப்பு பெருமளவில் குறைந்து காணப்படும்.
  • இலையின் ஓரத்திலிருந்து சிறிது சிறிதாக காயத்தொடங்கும்.
  • பாதிக்கப்பட்ட வேர்த்தண்டு, மென்மையாக மாறி பின் அழுகி, பல நிறங்களில் காணப்படும்.
1final copy

மேலாண்மை:

  • நோய்  பாதிக்கப்படாத தாவர விதைகளை பயன்படுத்தவும்.
  • போதுமான பாசன வசதிகளை செய்யவேண்டும்.
  • நடுவதற்கு முன், காப்பர் ஆக்சிகுளோரைடு அல்லது ஜீனாப் 0.3 சததில் வேர்த்தண்டினை 30 நிமிடம் மூழ்கவைக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை சுற்றியுள்ள மண்ணை, காப்பர் ஆக்சிகுளோரைடு (0.25 சதம்) கொண்டு  நனைக்கவும்.
  • சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் (2.5 கிலோ/எக்டர்) மண்ணில் இடவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016