நன்னெறி வேளாண் முறைகள் :: முன்னுரை

உலக வேளாண்மை 21 ஆம் நூற்றாண்டில் மூன்று முக்கிய சவால்களை மேற்கொள்ளவுள்ளது.

  1. உணவு பாதுகாப்பு, நகர்புற வாழ்க்கை தரம் மற்றும் வருவாய் மேம்பாடு
  2. அதிகரித்து வரும் பாதுகாப்பான உணவு மற்றும் உணவு பொருட்கள் தேவையை பூர்த்தி செய்தல்
  3. இயற்கை வளங்களை பாதுகாத்தல்.

இன்றைய வேளாண்மையானது உணவு பாதுகாப்பு மற்றும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி செய்வதுடன் சுகாதாரமான சுற்றுப்புற சூழ்நிலை, சமுதாயம் மற்றும் பொருளாதார நன்மைகளையும் உறுதி செய்வது முக்கிய எதிர்பார்பாகும். இந்த முக்கிய சவால்களை மேற்கொள்ள நன்னெறி வேளாண் முறையில் மேற்கொள்ளலாம்.

நன்னெறி வேளாண் முறைகள் என்றால் என்ன?
நம் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டாலும், மண்வளம் கெடாமலும் பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டும் பயன்படுத்தி சுகாதாரமான மற்றும் உடலுக்கு பாதுகாப்பான உணவு பொருட்களை உற்பத்தி செய்வதே நன்னெறி வேளாண் முறைகளாகும். உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு நிறுவனம் (FAO) வேளாண் உணவு பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் (APEDA) போன்றவற்றை நுகர்வோருக்கு நல்ல பாதுகாப்பான, நஞ்சு எஞ்சியிராத உணவுப்பொருட்களை நுகர்வோர் நன்முறையில் வழங்கும் நோக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது வர்த்தக ரீதியாக வளர்ந்துவரும் போட்டி மற்றும் தனி அதிகாரம் காரணமாக பல புதிய தரக்குறியீடுகளை அறிமுகப்படுத்துவது இன்றியமையாததாகும்.

நன்னெறி வேளாண்மையின் பயன்கள்
விவசாயிகள் நன்னெறி வேளாண் உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரிய பல பயன்களை பெறமுடியும்.

  1. சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  2. மண்வளம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
  3. நுகர்வோருக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைக்க வழி செய்கிறது.
  4. தரமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிதும் துணை புரிகிறது.
  5. விவசாயப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
  6. பண்ணையிலிருந்து பெறப்படும் விளைபொருட்களின் அளவு மற்றும் விற்பனை தரம் அதிகரிக்கிறது.
  7. விளை பொருட்கள் பதப்படுத்தப்பட்டு மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்ய வழி வகிக்கிறது.

தற்பொழுது நன்னெறி வேளாண்மையில் பல்வேறுபட்ட தரக்காட்டுப்பாடுகள், உணவுதொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களில், இணைந்து வேளாண் பொருட்கள் உற்பத்தி முறைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013