தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்
பழங்குடி மக்கள் சுய உதவிக் குழு :

கன்யகுமரியில் உள்ள பேச்சிப்பாரை பஞ்சாயத்தில் 2500 கணிக்கர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் 24 காடுகளில் வசித்து வருகின்றனர். ச.ராஜன் என்பவர் முதுநிலை படிப்பை முடித்து தற்பொழுது பஞ்சாயத்து தலைவராக பணியாற்றுகிறார். 

success story

இயந்திர படகுகளை தர வேண்டும் என்ற கணிக்கர் பழங்குடியினர்கள் நீண்ட நாள் கோரிக்கை மேம்பாட்டு முகாம். கன்யகுமரி அவர்கள் சுவர்ணஜெயந்தி  கிராம சுவர்ஜ்கார் யோஜ்னா திட்டத்தின் கீழ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 5 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்கு, 90,000 ரூபாய் நிதியை இத்திட்டம் வழங்கியுள்ளது. இந்நிதித்தொகை மற்றும் வங்கி கடன்களைக் கொண்டு, இயந்திர படகு வாங்கப்பட்டது. இக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் படகு செயல்பாடு மற்றும் பராமரிப்பு பற்றி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடன் தொகையை சுமார் ஐந்து வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். முதலில் படகுகளை பேட்டைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பேச்சி பாறை அணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதற்கு உபயோகப்படுத்தப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் மாதத்திற்கு ரூ.10,000 வருமானமாக பெறுகின்றனர். பள்ளி குழந்தைகளை வெகு தூரம் அழைத்து செல்வதற்கு படகுகள் மிகவும் உதவுகின்றன. ஆனால் அதிக பள்ளி குழந்தைகள் படகுகளில் பயணிப்பதால் அவர்களது பெற்றோர்களால் சரிவர படகு கட்டணம் செலுத்த இயலவில்லை. படகு சேவை செய்யும் தேனீ சுய உதவிக் குழுக்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமிடம் பழங்குடியினர் இனத்தை சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு பயண சலுகைகள் அளிக்க வேண்டுகின்றனர். 

மூலதனம்:

http://kanyakumari.nic.in/selfhelp.html

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015