தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: கோடை காலத்திற்கான பானங்கள்
கோடை காலத்திற்கான இந்திய பானங்கள்
சூரிய கதிர்களின் தாக்கம் கோடையில் அதிகபட்சமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை குளிர்ந்த பானங்களால் குறைக்க முடியும். சாதாரண குளிர்பானங்களை விட நமது பாரம்பரிய உணவில் உள்ள புத்துணர்ச்சி, சக்தி ஊட்டக்கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள் சிறப்பு வாய்ந்ததாக கருப்படுகிறது. நீரிழப்பு நேராமல் காக்கக்கூடிய இந்திய பானங்களின் பட்டியல் பின்வருமாறு:
மசாலா மோர்:
தயிர், தண்ணீர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து மண்பானையில் நன்றாக கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானமாகும். தாகத்தை தீர்ப்பதோடு ஜீரணத்திற்கு சிறந்ததாகும்.

லஸ்ஸி(இனிப்பு மோர்):
இது புகழ்பெற்ற வட இந்திய இனிப்பு பானமாகும். புதிய புளிக்காத தயிர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் சில சமயம் உப்பு சேர்த்தும் பரிமாரப்படும். புரதச்சத்து மிகுந்த இந்த பானம் உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா பொருட்களை சேர்த்தும் பரிமாரப்படும். பால் போன்று அடர்த்தியான திரவமான லஸ்ஸி மோரை விட கெட்டியானது.

எலுமிச்சை நீர்:
எளிதாகக் செய்யக்கூடிய புத்துணர்ச்சி தரும் பானம் மிகவும் பிரசித்தமானது. வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த பானம் சிறந்த சக்தி அளிக்கக்கூடிதாகும்.

சீரகம் கலந்த நீர்:
சீரகம் மற்றும் நீர் கலந்த பானம் குளிர்ச்சி தன்மைக்காக புகழ் பெற்றது. இது பசி தூண்டக்கூடியதாகும். இது புளிப்பு மற்றும் காரச்சுவையுடையதாகும். இதில் மிளகு, புதினா மற்றும் சீரகம் சேர்க்கப்படும்.

தண்டை:
தண்டை விழா காலத்தில் செய்யப்படும் பிரத்யேகமான பானமாகும். இது பால், பாதாம், பன்னீர், ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ கொண்டு செய்யப்படுகிறது. இது சிறந்த குளிர்ச்சி தரும் தன்மையுடையது.
மசாலாபால்:
பால் மற்றும் உலர்ந்த பழங்களை சேர்த்து கொதிக்க வைத்து பின் ஆரவைக்க வேண்டும். இது கொட்டைகளின் நலன்களோடு உலர்ந்த பழங்களின் சுவைகளும் கொண்ட சிறந்த சக்தி அளிக்கும் பானமாகும். இதை உணவுக்கு பதிலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கரும்புச்சாறு:
சாலையில் எளிதில் கிடைக்ககூடிய விலை குறைந்த வருடம் முழுவதும் கிடைக்கும் பிரபலமான பானமாகும். கோடைக்காலத்தில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கரும்புச்சாறு புத்துணர்ச்சி தரக்கூடியது.

சர்பத்:
இந்திய இல்லரங்களில் விருந்தினரை வரவேற்க தயாரிக்கப்படும் பானமாகும். பாரம்பரியமாக செய்யப்படும் சர்பத் புளி, நெல்லி, கசகசா கொண்டு புளிப்பு தன்மையுடன் இருக்கும். இலந்தை அல்லது விலாம்பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்தது. பழக்கூழுடன் நீரும் சேர்த்து வடிகட்டி சர்பத் செய்யப்படுகிறது.

மாங்காய் பானகம்:
மாங்காயை கொண்டு செய்யப்படும் பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. இளம் பச்சை நிறத்தில் உள்ள இப்பானம் இனிப்பு, புளிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களைக் கொண்டது. வைட்டமின் சி சத்து  நிறைந்த இந்த பானம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காசநோய், இரத்தசோகை, காலரா மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவல்லது.

பாதாம் பால்:
பாதமை அரைத்து பாலுடன் சேர்த்து செய்யப்படும் இப்பானம் தாது உப்புக்கள், நார்சத்து மற்றும் வைட்டமின் இ நிறைந்த பானமாகும்.

மஸ்தானி:
புனே நகரத்திலிருந்து பிரசித்தி பெற்ற இப்பானம் பால்கலவை போன்று அடர்த்தியாகவும் வெண்மை தன்மையுடனும் இருக்கும். பொதுவாக உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளை மேலே அலங்கரித்து பரிமாரப்படும் ஒரு சிறந்தகோடை கால பானமாகும்
ஆதாரம் :
http://www.vegrecipesofindia.com/indian-summer-drinks/
http://www.sailusfood.com/categories/beverages_indian_drinks_sharbats/
http://indianfood.about.com/od/drinkrecipes/tp/topsummerdrinks.htm
http://www.instructables.com/id/Indian-Summer-Drink/
http://www.food4you.in/mango-lassi/
 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015