organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

உயிர்சக்தி மாட்டுக் கொம்பு சிலிக்கா:


நன்றாக பொடி செய்த குவார்ட்ஸ் துகள்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்தத் துகள்கள் நல்ல தரம், வடிவம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உயிர்சக்தி 500 ஐ தயாரிப்பு முறை மாதிரியே இதையும் புதைக்க வேண்டும். ஆனால் இந்த முறையை வெயில் காலத்தில் செய்ய வேண்டும். (ஏப்ரல் / மே மாதத்தில் புதைத்து, செப்டம்பரில் வெளியே எடுக்க வேண்டும்). இந்த சமயத்தில் நிலம் நல்ல காற்றோட்டமாகவும், விண்வெளி ஒளிச் சக்தி அதிகச் செயலாக்கத்தில் இருக்கும்

தேவையான பொருட்கள்:

  • மாட்டுக் கொம்புகள்
  • சிலிக்கா குவார்ட்ஸ் துகள்கள், 200 - 300 கிராம் அளவு குவார்ட்ஸ் துகள்கள் / கொம்புகள்

தயாரிக்கும் முறை:

  • சிலிக்கா குவார்ட்ஸை உடைத்துத் தூளாக்க வேண்டும்
  • இரண்டு கண்ணாடித் தட்டுக்களின் இடையே வைத்து அரைத்து நன்றாக பொடி செய்ய வேண்டும்

முதல் கண்ணாடித் தட்டு – 12” சதுரமாக, 9 மி. மீட்டர் தடிமன்னான மரப்பலகையால் ஆனது. இரண்டாவது கண்ணாடித் தட்டு  - 4” சதுர கண்ணாடித்தட்டு கைப்பிடியுடன் கூடிய மரப்பலகையின் மீது வைக்கப்படும்.

  • தயாரிக்கும் போது முகமூடிகள் அணிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் குவார்ட்ஸ் புகையை சுவாசித்து, சிலிக்காஸிஸ் வியாதி ஏற்படும்.
  • தண்ணீருடன் சேர்த்து திட்டமான புகையை உருவாக்க வேண்டும்.
  • கொம்புகளை சிலிக்கா பூச்சு கொண்டு நிரப்ப வேண்டும்.
  • கொம்புகளை குழிகளில் 1” அளவுக்கு அடிப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு புதைக்க வேண்டும். 50 சதவீத மட்கிய உரம் மற்றும் மண் சுற்றியும் இருக்க வேண்டும். மார்ச் / ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதை வைத்திருக்க வேண்டும்.
arrow

அளிப்பு முறைகள்:

BD 500 ஒன்று அல்லது இரண்டு அளிப்புகளுக்குப் பிறகு 501 ஐ அளிக்க வேண்டும். பனிப் பொழியும் வேளையில், அதாவது அதிகாலை 6 – 8 மணிக்கு சூரியன் உதிக்கும் வேளையில் தெளிக்க வேண்டும்.

  • 15 லிட்டர் வெது வெதுப்பான நீரில் 1 கிராம் சிலிக்காவை கரைக்க வேண்டும்.
  • சூரிய உதயத்திற்கு முன், சிலிக்காவை தண்ணீரில் கரைத்து  வலதுப் பக்கம் மற்றும் இடதுப் பக்கம் மாற்றி மாற்றி சுழல் போன்று கலக்க வேண்டும்.
  • பயிர்கள் குறை அழுத்தம் உடைய தெளிப்பான் உதவியுடன் தெளிக்க வேண்டும்.
  • பயிரிடும் காலத்தில் 2 முறை தெளிக்க வேண்டும். அதாவது, பயிரின் ஆரம்ப நிலையிலும், அறுவடைக்கு சற்று முன்னரும் தெளிக்க வேண்டும்.

சேமித்தல்:

திறந்த வெளியில் சூரிய வெளிச்சம் படுமாறு 3 வருடங்களுக்கு தளர்வாக மூடிய கண்ணாடிக் குடுவையில் சேமிக்க வேண்டும்.

பயன்கள்:

  • ஒளி வளர்சிதை மாற்றம், ஒளிச்சேர்க்கை, பச்சையத்தை அதிகரிக்கிறது.
  • நிறம், மணம், சுவை மற்றும் செடிகளுக்கிடையே வைத்திருக்கும் தரத்தை மேம்படுத்துகிறது.
arrow

தகவல்:

  • செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு

 

Updated on Oct 2014