organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

நான் எங்கே உயிர் உர உற்பத்தி ஆலையை அமைப்பது பற்றிய நிறைய தகவல்களை பெற முடியும்?

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண்  உயிரியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003.

மண்புழு உரம் என்றால் என்ன? நான் இந்த தொழில்நுட்ப விவரங்களை எங்கு பெற முடியும்?

மண்புழுக்கள் வளர்ப்பு  என்பது தரமான மண்புழு உரம் தயாரிப்பதற்கான ஒரு தொழில்நுட்பம் ஆகும். மண்புழு உரம் பற்றி மேலும் விவரங்களுக்கு நீங்கள்  டாக்டர். சுல்தான் அகமது இஸ்மாயில், இயக்குனர், சுற்றுச்சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளை, பாஸ் நகர், பாலவாக்கம், சென்னைக்கு தொடர்பு கொள்ளலாம்.

யார் உயிர் உரங்களை பயன்படுத்த முடியும்?

விவசாயத்தில் ஈடுபடுகின்ற எவரும் இந்த உயிர் உரங்களை பயன்படுத்த முடியும். இவற்றை பருப்பு வகைகள், பணப்பயிர்கள், தானிய பயிர்கள், தீவனம் பயிர்கள், எண்ணெய் விதை பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், காய்கறிகள், பழ மரங்கள், காட்டு மரங்கள், மருத்துவ மூலிகை மற்றும் அலங்கார செடிகள் போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

உயிர் உரங்கள்  மிகவும் நன்மை  தர கூடியதாகவும்,  புதிதாகவும்   இருப்பினும் கூட ஏன் ஒரு நல்ல இடத்தை பிடிக்க இயலவில்லை?

குறைந்த செலவில் வேளாண் உள்ளீடு, அதிக திறன் மற்றும் குறைந்த அடர்த்தி, ஆகியவற்றை  உயிர் உரங்கள் கொண்டிருந்தும், விவசாயிகளின் சாத்தியமான  நம்பிக்கையை வெல்ல முடியவில்லை. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கபட்டு உள்ளன.

அ) பொருட்களின் தரம்

உயிர் உரங்கள் உற்பத்தி மற்றும் தர கட்டுப்பாட்டில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தபடுகின்றன. எனவே, தகுதி மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் உயிர் உரங்கள் உற்பத்திப் பிரிவிற்கு வரிசைப்படுத்தப்பட வேண்டும்.

உயிர் உரங்களில் உயிருள்ள நுண்ணுயிரிகள் இருப்பதால், அவற்றை போக்குவரத்து மற்றும் சேமிப்பின் போது, குறிப்பாக கோடை காலத்தில் உயிர் உரங்கள் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுவதால் கவனமாகக் கையாள வேண்டும்.

ஆ) விழிப்புணர்வு மற்றும் கல்வி

பெரும்பாலும் இந்த உயிர் உரங்களை  பிரபலபடுத்துவதில்  விழிப்புணர்வு மற்றும் கல்வி மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. விவசாய சமுதாயத்தின் மத்தியில்  போதிய விழிப்புணர்வு மற்றும் கல்வி இல்லாததால், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின்  வகைகள்  பற்றி பல தவறான கருத்துகள் உள்ளன. பெரும்பாலும், உயிர் உரங்கள், இயற்கை உரம் மற்றும் பிற ஊட்டச்சத்து சார்ந்த பொருட்கள் என்ற தவறான கருத்து  உள்ளது. எனவே, வேளாண் சமூகத்தினிடையே உயிர் உரங்கள் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு இருத்தல் மிகவும் முக்கியம்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016