organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

இஞ்சிப் பயிரின் அங்கக சாகுபடி

இந்தியாவில் பல மாநிலங்களில் இஞ்சி சாகுபடி செய்யப்படுகிறது.மத்திய கிழக்கு சந்தைகளில் உலர்ந்த இஞ்சிக்கு அதிகத் தேவை இருக்கிறது. உலர் இஞ்சியை இந்தியா தான் அதிகளவு ஏற்றுமதி செய்கிறது.

இஞ்சி ஒரு வெப்பமண்டலப் பயிராகும்.இந்த பயிர் நன்கு நீர் வடியும் பொறைத் தன்மையுடைய மண்களில் நன்றாக வளரும்.இஞ்சி அதிகளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுப்பதால் தொடர்ந்து வருடாவருடம் பயிரிடக்கூடாது.அதனால், பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். நீர் தேங்கி நிற்கும் நிலையில் வளராது. நன்கு நீர் வடியும் மண்ணே சாகுபடி செய்ய ஏற்றது. அங்கக சாகுபடி செய்யம் வயல் பழைய முறைப்படி சாகுபடி செய்யும் பண்ணையிலிருந்து 25 மீ. அகலத்துக்கு இடைவெளி விட்டு தனித்து இருக்க வேண்டும. ஒராண்டு பயிராக இருப்பதால், 2 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றம் இருக்க வேண்டும். இஞ்சி ஊடுபயிர் (அ) கலப்பு பயிராகவோ சாகுபடி செய்யலாம். பயிறு வகைப் பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யலாம். இஞ்சி-வாழை-பயிறு வகை (அ) இஞ்சி-காய்கறிப் பயிர் -பயிறு வகைப் பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

பயிரிடத் தேவையான மூலங்கள்

நோய் மற்றும் பூச்சியற்ற கிழங்குகளை பயிரிட ஏற்றது.அதிக மகசூல் தரக்கூடிய உள்ளூர் இரகங்களையும் அங்கக சாகுபடிக்கு பயன்படுத்தலாம். விதைக் கிழங்குகளை எந்த இராசயதனத்துடனும் விதை நேர்த்தி செய்யக் கூடாது. 

நிலத்தை தயார் செய்தல் மற்றும் பயிரிடுதல்

குறைந்தபட்ச உழவு முறைகளை பயன்படுத்தலாம். விதைப்படுக்கைகள் 15 செ.மீ. உயரத்துடன், 1மீ அகலம், தேவைப்படும் நீளத்திற்கு 50 செ.மீ. இடைவெளி விட்டு தயார் செய்ய வேண்டும்.விதைப் படுக்கைகளை வெப்பமூட்டுவதால் பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளை அழிக்கலாம்.பாலித்தீன் சீட்கள் மண் வெப்பமூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.விதைக்கும் போது, 25 கி வேப்பத்தூள் மண்ணுடன் கலந்து ஒவ்வொரு குழிக்கும் இடவேண்டும்.20-25 செ.மீ. வரிசைகளுக்கு இடைவெளி விட வேண்டும்.விதை கிழங்குகளை ஆழம் குறைந்த குழிகளில் நட்டு, நன்கு சிதைந்த மாட்டு எரு (அ) கம்போஸ்ட் உடன் டிரைக்கோடெர்மாவை 10 கிராம் கம்போஸ்ட் உடன் டிரைக்கோடெர்மாவை கலக்க வேண்டும், சேர்த்து இட வேண்டும்.

உழவியல் முறைகள்

பச்சை இலைகளைக் கொண்டு விதைப்படுக்கைகளை மூடாக்கு செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் அதிகமாவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.மேலும், அங்ககப் பொருளின் அளவு கூடுகிறது, ஈரப்பதற்கு மண்ணில் அதிகரிக்கச் செய்கிறது.பசுந்தழைகளை கொண்டு முதல் மூடாக்கில் 10-12 டன் எக்டர் என்ற அளவில் விதைக்கும் காலத்தில் செய்ய வேண்டும். இதையே ஒரு எக்டரக்கு 5 டன் என்ற அளவில் பசுந்தழைகளை  பயிரிட்ட 40 மற்றும் 90 வது நாறில் செய்ய வேண்டும்.லேன்டனா காமரா மற்றும் லிட்டக்ஸ் நெகுண்டோவை பயன்படுத்துவதால் தண்டு துளைப்பானின் தாக்கத்தைக் குறைக்கலாம்.மாட்டு சாணி (அ) திரவ உரத்தை, விதைப் படுக்கைகளின் மீது ஒவ்வொரு மூடாக்கலுக்குப் பிறகு தெளிக்க வேண்டும். களை வளர்ச்சியைப் பொறுத்து களையெடுக்க வேண்டும். சரியான தகுந்த வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

உரமிடுதல்

நன்கு சிதைந்த மாட்டு சாணி (அ) கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5-6 டன் என்ற அளவில் குழிகளில் கிழங்குகளை நடும் போது இட வேண்டும். ஊட்டமேற்றிய கம்போஸ்ட்டையும் பயன்படுத்தலாம்.மேலும், வேப்பங்கட்டியை ஒரு எக்டருக்கு 2 டன் என்றஅளவில் அளிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு

நோய்கள்

மென் அழுகல் (அ) கிழங்கு அழுகல் பித்தியம் அஃபேனிடெர்மேட்டம் என்ற நோய்க் காரணியால் ஏற்படும். இந்த நோயகை் கட்டுப்படுத்த இஞ்சி சாகுபடி செய்ய வயலைத் தேர்வு செய்யும் போதே நல்ல வடிகால் வசதியுடைய நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.விதைப் படுக்கைகளின் மீது வெப்பமூட்டுவதாலும் பூஞ்சாண் வித்துக்களை அழிக்கலாம். இருந்தாலும்,நோய் தோன்றியிருந்தால் நோயுற்ற குத்துக்களை கவனமாக சேதம் ஏற்படாமல் அகற்ற வேண்டும்.விதைக்கும் போது டிரைக்கோடெர்மாவை இடலாம்.போர்டாக்ஸ் கலவையை (1%) நோயைக் கட்டுப்படுத்த அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

சூடோமோனஸ் சொலானேஸ்சியேரம் என்ற நோய் காரணியால் ஏற்படும் பாக்டீரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்த விதைக் கிழங்குகளை 200 ஸ்ட்ரப்டோசைக்ளி 30 நிமிடங்கள் நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.வயலில் நோய் தோன்றியவுடன்,போர்டாக்ஸ் கலவையை (1%) விதைப்படுக்கைகளின் மீது ஒரே மாதிரி நனையும் படி தெளிக்க வேண்டும்.

சீரான வயல் ஆய்வு மற்றும் கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்வதால் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.கோனோகீத்தஸ் பங்டிபெராலிஸ் என்ற தண்டு துளைப்பான் ஜீலை அக்டோபர் மாதத்தில் தோன்றும்.இதைக் கட்டுபடுத்த பூச்சிதாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.தண்டுப்பகுதியை வெட்டி, புழுக்களை வெளியே எடுத்து,அழிக்க வேண்டும்.வேப்ப எண்ணெய் (0.5%) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.விளக்குப் பொறியை வயலில் வைப்பதால் தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். 

அறுவடை மற்றும் அறுவடைபின் சார் முறைகள்

எட்டு முதல் பத்து மாதங்களில் இந்தப் பயிர் அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக, மெது மெதுவாக காய ஆரம்பிக்கும்.அப்பொழுது குத்துக்களை கவனமாக, சேதம் ஏதும் ஏற்படாமல் கிழங்குகளை தோண்டி  எடுக்க வேண்டும்.பின் காய்ந்த இலைகள்,வேர்கள், கிழங்கைச் சுற்றியிருக்கும் மண்ணை அகற்ற வேண்டும், ஒரு எக்டருக்கு 15 முதல் 20 டன் அளவு மகசூல் இருக்கும்.காய்கறி இஞ்சிக்கும், 6மாதத்திலிருந்தே அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இஞ்சிகளை நன்றாக நீரில் 2-3 முறை கழுவி, சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். 

காய்ந்த இஞ்சி தயாரிப்பதற்கு, அறுவடை செய்த இஞ்சிகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, கிழங்குகளை நன்றாக உரைக்க வேண்டும்.சுத்தம் செய்த பிறகு, நீரிலிருந்து வெளியே எடுத்து,வெளித் தோலை கத்தி (அ) குச்சி கொண்டோ கரண்டி எடுக்க வேண்டும்.காய்ந்த இஞ்சிகளை ஒன்றோடொன்று உராய்ப்பதால் கடைசித் தோல் வரை உரிந்து வரும்.பின் கிழங்குகளை 11% ஈரப்பதம் இருக்கும் அளவு உலர்த்தி, சேமிக்க வேண்டும்.உலர் இஞ்சியை அதிக காலத்திற்கு சேமிக்க முயாது. உலர் இஞ்சியின் மகசூல் 16-25% புத்தம் புது இஞ்சியை விட அதிகமாக இருக்கும். பதப்படுத்த கந்தகத்தை எரிக்கக் கூடாது.

விதைக் கிழங்குகளைப் பாதுகாத்தல்

விதைக்காகப் பயன்படுத்தும் கிழங்குகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். உள்ளூர் முறைகளான கிளைகோமைஸ் (மலையாளத்தில் ‘பனால்’ என்று அழைப்பர்) பென்டாபில்லா என்ற செடியின் இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வைக்க வேண்டும். குழிகளில் நிழலின் அடியில் வைத்து பாதுகாக்க வேண்டும். விதைப் பயன்பாட்டிற்காக, அறுவடை செய்தவுடனேயே பூச்சி நோயுற்ற விதைக் கிழங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விதைக்கிழங்குகளை குழிகளில் வைத்து வெயில், மழை படாதவாறு பாதுகாக்க வேண்டும். குழிகளின் பக்கச் சுவர்களின் சாணத்தை பூச வேண்டும். விதைக் கிழங்குகளை குழிகளில் வைக்கும் போது உலர் மணல் (அ) மரத்தூள் கொண்டு அடக்கடுக்காக அமைக்க வேண்டும். குழிகளின் மீது காற்றோட்டத்திற்காக போதுமான இடைவெளி விட வேண்டும். குழிகளை மரக்கட்டை கொண்டு மூட வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை குழிகளை ஆய்வு செய்ய வேண்டும். மணல் (அ) நெல் உமி, காய்ந்த இலைகள் கொண்டோ கிழங்குகளை மூடலாம்.