த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. ஜெ. ஜெயபாரதி

இடம்: காஞ்சீபுரம்

தொழில்: நண்டு விவசாயி


மகளிர் நண்டு விவசாயி (கூண்டுகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல்)

  • திருமதி. ஜெ.ஜெயபாரதி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட 'அன்னை' பெண்கள் சுய உதவிக் குழு தலைவர். கட்டூர் என்கிற கிராமத்தில் வசிக்கின்றார்.
  • இவர்கள், நண்டுகளை 100-200 சதுர மீட்டர் அளவிலானக் கூண்டுகளில் தடினமாக்கும் வேலை செய்கின்றனர். இதன் ஆழம், 1.5 மீட்டர் ஆகும். 
  • தண்ணீர் நண்டுகள், 350-1500 கிராம் இருக்கும். இவற்றை இருப்புச் செய்ய வேண்டும்.
  • நண்டுகள், தடினமாவதற்கு 3-4 வாரங்கள் ஆகும்.
  • தினசரி, குப்பை மீன்களை, நண்டுகளின் உடல் எடையின் 10 சதவீதம் ஊட்டப்படுகின்றது.
  • வலைகளைப் பயன்படுத்தி நண்டுகளை அறுவடை செய்ய வேண்டும்
  • இந்த குழுவிற்கு உள்ளூர் வர்த்தக வங்கி ஒன்றில் நல்ல சேமிப்பு உள்ளது. இந்த வங்கி, நண்டு தடிமனாக்கும் நடவடிக்கைகளுக்கு வங்கிக் கடன் மூலம் இந்த குழுவிற்கு வழங்கி உதவுகின்றது.
  • ஒவ்வொரு நாளும் இவருடன் சேர்ந்து 12 உறுப்பினர்கள் வேலை பார்க்கும் இடத்தை அடைய 4 கி.மீ. நடக்க வேண்டும்.
  • திருமதி எஸ். ஜெயபாரதி அவரது சக உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு  கொண்டுவர கடுமையாகப் போராடினார்.
  • திருமதி எஸ். ஜெயபாரதி மற்றும் அவரது குழுவினர், சுய உதவிக் குழு மூலம் பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமின்றி முழு சமூகத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஒரு கருவியாக விளங்குகின்றது என்று கருத்து தெரிவித்தனர்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016