Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்

பின்செய் நேர்த்தி

  • 10 பாக்கெட் (2 கிலோ / எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா அல்லது 10 பாக்கெட் (2 கிலோ / எக்டர்) அசோபாஸ்ஸை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து மழை அல்லது ஈரப்பதமான சூழலில் சீராக தூவ வேண்டும்.

  • பயிர் களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் அமைதல் நன்று

  • மிகவும் வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் (ஓரு மி.லி.லிட்டர் தண்ணீரில்) சைகோசெல் பயிரில் தெளித்தல் வேண்டும்

  • வறட்சியான காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதம் ‘கயோளின்’ இலையில்தெளித்தலும், ஒரு சத பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இலைவழி நீர் ஆவியாவதைக் குறைத்து நல்ல பலனைத்தரவல்லது.

மற்ற பின்செய் நேர்த்தி முறைகள்

  • பவானி ஆற்றுப்பாசனப்பகுதிகளில் இம்முறை பின்பற்றியிருப்பின் 2 அங்குலம் வரை நீர் பாய்ச்சி, பாய்ச்சிய நீர் மறைந்த 3 நாட்களுக்குப் பின் மீண்டும் நீர் கட்ட வேண்டும். விதைப்பு செப்டம்பருக்குப் பின் என்றால் ஆடுதுறை 38 இரகம் ஏற்றது.

  • முதல் மேலுரம் ஆற்றின் தண்ணீர் வந்த உடன்’ செய்யப்படவேண்டும்.

  • களை எடுப்பது, பயிர் களைவது, பாடு நிரப்புதல் தழைச்சத்து அளித்தலுக்கு முன்பு அமைவது நல்லது.

 

 
Fodder Cholam