| உர மேலாண்மை 
        
          பொதுவான உர       அளவு 50 : 25 : 25  கிலோ தழை, மணி, சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு.
 ஊட்டமேற்றிய       தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்து அடியுரமாக       இடப்படவேண்டும்.
 தழைச்சத்து       25 கிலோ சாம்பல்சத்து 12.5 கிலோ இருமுறை, பயிர்முளைத்த 20-25 நாட்களில் முதலிலும்       மீண்டும் 40-45 ஆம் நாட்கள் மரு முறையும் இடப்படவேண்டும்.
 மழை பெய்வது       நல்ல முறையில் மண்ணின் ஈரம் தூர் கட்டும் பருவமிருந்தே அமையும் சந்தர்ப்பங்களில்       தழைச்சத்தும், சாம்பல் சத்தும் மூன்றாவது முறையாக 60 லிருந்து 65 நாட்களுக்குள்       அல்லது கதிர் வெளிவரும் பருவத்தில் இடுதல் அதிக மகசூல் தரவல்லது.
 மூன்றாம் முறை       உரம் அளிக்கப்படும் தருணத்
இரும்பு சத்து குறைபாடுள்ள       மண்ணில் இரும்பு சல்பேட் எக்டருக்கு 50 கிராம் அடி உரமாக இடலாம் (அல்லது) எக்டருக்கு       தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில்       தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.
 0.5% துத்தநாக சல்பேட் மற்றும்       1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில்       தெளிக்க வேண்டும்.
 இலைவழி உரமான       யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாஷ் 1 சதம் கரைசல் இருமுறை, பூங்குருத்து       உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று. |