Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நெல்

புழுதிவிதைத்த மேட்டுக்கால் நெல்

உற்பத்தி முறை

  • புழுதி விதைத்த மானாவாரி போன்றே எல்லா பக்குவமும் செய்யப்படவேண்டும்

ஏற்ற பகுதிகள்

  • தமிழகத்தில் மிகவும் சிறிதளவிலேதான் மேட்டுக்கால் நெல் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் கடற்கரைப்பகுதிகளில் கிடைக்கும் மழையை விட தொடர்ந்து மழைபெற வாய்ப்புள்ளது. தண்ணீரை நிலை நிறுத்த வரப்புகள் அமைக்கப்படுவதில்லை. இப்பகுதிகளில் மண்ணில் ஈரம் தொடர்ந்து இருக்கலாம். ஆனால் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. பயிரின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகின்ற உரச் சத்துக்கள் மழையின் அளவைப் பொறுத்தே அமைகின்றது

பயிரின் மற்ற முறைகள்

  • பகுதி 4-ல் கூறப்பட்டது போன்றே ஆகும்.
  • உரச்சத்துக்கள் பிரித்து அளிக்கப்படவேண்டும்
  • இலைவண்ண அட்டை யின் மூலம் தழைச்சத்து அளிக்ப்பட்டால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது
  • இளஞ்சிவப்பு நிறமூட்டப்பட்ட நிலைமாறும் நுண்ணுயிரிகளை வறட்சியை தாங்குவதற்காக பயன்படுத்த வேண்டும். (விதை நேர்த்தி - 5 கிலோ விதைக்கு 0.2 கிராம், மண்ணிற்கு அடி உரமாக – எக்டருக்கு 2 கிராம் மற்றும் இலைத் தெளிப்பு – 500 மிலி / எக்டர் கதிர் அரும்பும் மற்றும் கதிர் தாள் தோன்றும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.
lcc
இலைவண்ண அட்டையின் மூலம் தழைச்சத்து மேலாண்மை

இளஞ்சிவப்பு நிறமூட்டப்பட்ட நிலைமாறும் நுண்ணுயிரி

ஊடுபயிர்

  • தண்ணீர் தேங்காத நிலை இருப்பதால் உளுந்தை ஒவ்வொரு நான்கு நெல் வரிசைக்கு இடையில் ஊன்றி கூடுதலாய் ஊடுபயிரின் மகசூல் காணலாம்

மகசூல்

  • மகசூல் நீரின் அளவைப் பொறுத்தும் உரச்சத்துக்கள் அளிக்கப்பட்டதைப் பொறுத்தும் அமைகிறது.

Updated on : Jan 2014

 
Fodder Cholam