Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நெல்
  • குறுகியகால இரகங்களில் 20 நாட்களான நாற்றுக்களை வீசுதல் நல்லது.

  • வரிசை நடவு செய்வதை விட ஏறக்குறைய 20 சதவிகிதம் நாற்றுக்கள் அதிகமாக தேவைப்படும் அல்லது முறைமையற்ற நடவில் தேவைப்படும் அளவுக்குச் சமமாக இம்முறைக்கும் தேவைப்படும்.

  • நன்கு சேற்றுழவிட்டு சமன்படுத்திய வயலில் நடவு செய்பவர்கள், நாற்றுக்களை வேகம் இல்லாமல் வீசிப் போடுவர்.

  • தாளடி அல்லது மிகுந்த மழைப் பருவத்தைத் தவிர அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்றது.

  • வரிசை நடவோடு ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அளவு ஆட்கள் சேமிப்பும், முறைமையற்ற நடவைவிட 35 சதவிகிதம் அளவு ஆட்கள் சேமிப்புத் திறனும் கொண்டது.

  • 7-10 நாட்கள்வரை நாற்று வீசுதல் முறை இருப்பின் வயலில் மெல்லியபடலம் நீர்   இருக்குமாறு (சேற்று நெல் போல்) பாதுகாக்க வேண்டும்.

  • மற்ற வளர்ப்பு முறைகள் அனைத்தும் வழக்கமான நடவு வயல் நெல் முறையைப் போன்றது.

  • வரிசை நடவு முறையைப் போன்று இம்முறையிலும் சமமான தானியமகசூல் கிட்டும். முறைமையற்ற நடவு முறையைவிட 10-12 சதவிகிதம் அதிக மகசூலைப் பெறலாம்.

 

 
Fodder Cholam