Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல் :: நடவு வயல் பராமரிப்பு
நஞ்சையில் சேற்று நெல்

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம்

  • தழைச்சத்து இடும் தருணம் இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.
  • இலையின் பச்சைய அளவை மிதிப்பழவிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து பின்னபற்றவேண்டும்.
  • அளவீடு ஒவ்வொரு வாரமும் செய்யப்படவேண்டும்.
  • மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும்
  • மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்படவேண்டும்.
  • வண்ண அட்டையைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு அளவிடுபவர் நிற்கவேண்டும்
  • அளவிடும் காலம் பொதுவாக ஒருகுறிப்பிட்ட நேரமாக இருத்தல் நல்லது. அது காலை 8-10 மணிக்குள் என்றால் நல்லது.
  • அளவிடுபவரும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நபரே என்றால் அளவீடு சரியாக அமையவாய்ப்புள்ளது.
  • அளவீடு எண் ரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தை தாங்க முடியாத இரகங்கள் எனில்3.0 என்றும் மற்ற ரகங்களுக்கும், 4.0 என்பதை மறக்கலாகாது
  • அவ்வாறு முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும் என்று பொருள். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து (ஒரு பை யூரியா) அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிகக் வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். இரகங்கள் மற்றும் கலப்பினங்களின் அளவீட்டு எண் 4கிற்கு கீழ் குறைந்தும் மற்றும் வெள்ளை பொன்னி இரகத்திற்கு 3 என்ற அளவீட்டு எண்ணாக இருப்பினும் நட்ட 14ம் நாளிலிருந்து கண்காணிக்க வேண்டும்.
  • வயதான நாற்றுகள் : 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டா தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மேலும் நட்ட 14-ம் நாளிலிருந்து இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

** பகுதிக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை அணுகு முறை மூலம் நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உர அளவுகள் (காவேரி டெல்டா பகுதிகளை தவிர)

வ.எண் பகுதி பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (கிலோ/எக்டர்)*
மணிச்சத்து சாம்பல்சத்து
1 காவேரி டெல்டா பகுதி
(i) பழைய டெல்டா 35 50
(ii) புதிய டெல்டா 35 80
2 கோயமுத்தூர் மாவட்டம்
(i) பொதுவாக 30 40
(ii) ஆனைமலை மண்டலம் 30 80
3 கிள்ளிகுளம் 30 50
4 திருச்சி 35 50
5 அம்பாசமுத்திரம் 40 50
6 பவானி சாகர் 20 25
7 பையூர் 25 45
8 ஏத்தாப்பூர் 30 45
9 அருப்புக்கோட்டை 20 30
10 கடலூர் 30 50

** குறிப்பிட்ட மண் வகைகளிலிருந்து கிடைக்கும் மகசூலை பொருத்து எஸ்.எஸ்.என்.எம் அடிப்படையில் மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து பல்வேறு நெல் பயிரிடும் பகுதிகளுக்காக விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது.

 

 

   
Fodder Cholam