| வறட்சி மேலாண்மை 1. ஊட்டச்சத்து மேலாண்மை 
        
          வறட்சி ஏற்படும் போது, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இது மட்டுமல்லாமல் கரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே கீழ்க்கண்ட சத்துக்களை பயிர்களுக்க இணங்க, குறைபாட்டிற்கு ஏற்ப தெளிக்கவேண்டும்.20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட்0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு0.5 சதவீதம் துத்தநாக சல்பேட்0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் + 1 சதவீதம் யூரியா0.3 சதவீதம் போரிக் அமிலம் ஆன்டிடிரான்ஸ்பிரன்ட்ஸ் 
        
          பயிர்களின் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஆன்டிடிரான்ஸ்பரஸ் என்ற பெயர். இலைத்துளைகளை மூடுதல் 
        
          2,4 டி , பாஸ்பான் – டி, அட்ரசின்பினைல் மெர்க்குரி அசிட்டேட்ஹைட்ராக்ஸ் சல்போனேட்ஸ், பொட்டாசியம் மெட்டா  பை சல்பேட்அப்சிலிக் அமிலம், எத்ரல், டிபா, சக்சினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், சைக்கோசெல். பிரதிபலிக்கும் தன்மையுள்ளவை 
        
          கயோலின்சீனா களிமண்கால்சியம் பை கார்பனேட்சுண்ணாம்பு நீர்ஆல்கஹால் (ஹெக்சாடிகேனால், செட்டைல் ஆல்கஹால், மெத்தனால்)பேக்குலோபியூட்ரசால்பிராசினோலைடுரிசார்சினால் பாலித்தீன் பொருட்கள் 
        
          மொபிலீஃப்ஃபோரிகாட்மெருகுஎஸ் - 800ஹிகோ - 110 ஆர் பயிர்களில் ஏற்படும் நன்மைகள் 
        
          போதுமான அளவு மழை பெய்யாத போது பயிர்களில் மகசூலை அதிகரிக்க இந்த முறை உதவுகிறது.கடுமையான வறட்சி நிலவும் போது, ஒரு நிலையான மகசூலை எடுக்க வழிவகை செய்கிறது.தானியங்களின் அளவு பாதிக்கப்படுவதில்லை.விதைகளின் தரம் உயர்த்தப்படுகிறது.நீரைப் பயன்படுத்தும் திறன் குறைக்கப்பட்டு, நீர்ன் அளவு சேமிக்கப்படுகிறது.குறைந்த முதலீட்டில் பயிரின் சேதம தவிர்க்கப்படுகிறது.வறட்சியை சமன் செய்ய முடியும்.குறைந்த அளவு நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்க மிகவும் பயனளிக்கிறது.கோடைக் காலங்களில் நாற்றாங்கால் பயிரை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. வளர்ச்சி ஊக்கிகளில் பயன்பாடு 
        
          வறட்சிக் காலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை நிலைநிறுத்த வளர்ச்சி ஊக்கிகள் பெரிதும் உதவுகின்றன. சைக்கோசெல் மற்றும்  மெபிகுவாட் குளோரைடு 
        
          வேரின் வளர்ச்சியைத் தூண்டவும், நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகவும் உதவுகிறது. சைட்டோகைனின் மற்றம் சாலிசிலிக் அமிலம் 
        
          இலைகள் முதிர்ச்சியடையும் முன்னரே உதிர்வதைத் தடுக்கிறது. வறட்சிக் காலங்களில் தண்டில் சேமித்து வைக்கப்படும். உணவுப் பொருட்கள் பயிரின் வளர்ச்சிக்காகவம் பயன்படுத்தப்படுகிறது. பிராசினோலைடுகள் 
        
          பயிர்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கிறது. அஸ்கார்பிக் அமிலம் 
        
          வறட்சிக் காலங்களில், செல் சவ்வுகளின் பாதிப்பைத்த தடுப்பதற்கு அஸ்கார்பிக் அமிலம் உதவுகிறது. விதைகள் / தாவரங்களை கடினப்படுத்த 
        
          1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு1 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்100 பிபிஎம் சக்சினிக் அமிலம்0.5 சதவிகிதம் சோடியம்  குளோரைடு100 பிபிஎம் சக்சினிக் அமிலம்100 பிபிஎம் மாங்கனீசு சல்பேட்100 பிபிஎம் அஸ்கார்பிக் அமிலம்250 பிபிஎம் சைக்கோசெல்0.5 சதவிகிதம் மெக்னீசியம் சல்பேட் மேலும் சில வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் 
        
          2 சதவிகிதம் டீஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும்  பருவத்தில் தெளித்தல்.3 சதவிகிதம் கயோரின் கரைசலை வறட்சி காலங்களில் குறித்த பருவத்தில் தெளிக்கவேண்டும்.500 பிபிஎம் சைக்செல்லை இலைவழியாகத் தெளித்தல்கரும்பு / சோளத்தின் சோகையை நிலப்போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படுகிறது.பருத்தியில் நைட்ரஜன் உரங்களை பிரித்து விதைத்த 45 மற்றும் 60 நாட்கள் கழித்து இடுதல்உயிர் உரங்களைப் பயன்படுத்துதல்விதைகளை கடினப்படுத்துதல்என்ஏஏ 40 பிபிஎம் ( 4 மில்லி பிளானோபின்ஸ் / 4.5 லிட்டர் தண்ணீர்)பருத்தியில் 15, 20வது கணுப்பகுதிக்கு மேலே உள்ள பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் நீராவிப்போக்கைத் தவிர்க்கலாம்.0.5 சதவிகிதம் துத்தநாக சல்பேட் + 0.3 சதவிகிதம் போரிக் அமிலம் + 0.5 சதவிகிதம் இரும்பு சல்பேட் + 1 சதவிகிதம் யூரியா போன்ற கரைசலை வறட்சிக் காலங்களில் பயன்படுத்துதல். 
         |