Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை

மானாவாரி பயிர் உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனைகள்



மானாவாரி பயிர்கள. மிககுறைந்த மற்றும் வேறுபட்ட மகசூல் கொண்ட பயிர்கள் மற்றும் நிச்சயமற்றற மகசூல் கொண்ட பயிர்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. புன்செய் வேளாண்மையில் பயிர் தோல்வி என்பது மிகவும் சாதாரணமாக உள்ளது. இதற்கான மிக முக்கிய காரணங்களாக அமைவன, பின்வருபவை

போதுமான
மற்றும் சீரான மழை இல்லாத நிலை: பொதுவாக புன்செய் நிலங்களில் மழை அளவு மிக குறைந்த மற்றும் அதிக வேறுபாடு கொண்டதாக இருப்பதனால், பயிர்கள் நிச்சயமற்ற மகசூலை கொண்டதாக காணப்படுகின்றன. அதனுடன் பயிர்களுக்கு மழை தேவையான பொழுது, குறைந்த அளவும், தேவையற்ற பொழுது அதிக மழையளவும் என சமச்சீரற்ற மழை பொழிவு பரவலையும் கொண்டுள்ளது.
தாமதமான பருவமழை மற்றும் பருவமழை முன்பே பொழித்துவிடுதல்
தாமதமான பருவமழையின் காரணமாக, விதைத்தலும் தாமதமாகவே நடைபெறுவதால், பயிர் மகசூல் மிக குறைவாக இருக்கும். பருவ மழை முன்பே பொழித்துவிடுவதால் பயிர்களின் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவங்களில் வறட்சி ஏற்பட்டு பயிர்களின் மகசூல் குறைந்து காணப்படும்.

பயிர்
பருவ காலத்தில் ஏற்படும் நீண்டகால வறட்சி நிலை

இந்திய பருவமழையில், நீண்ட கால மழை இடைவெளி என்பது எப்போதும் இருக்கும் ஒன்று. இவ்வகை நீண்ட வறண்ட நிலை பயிர் பருவகாலங்களில் நிலவும் போது, பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்படுகிறது. சில சமயம் நீண்ட வறண்ட நிலை, பயிரை முற்றிலும் பாதிக்கும்.

குறைவான
மண் ஈரப்பதம் தக்கவைக்கும் திறன்

செம்மண் மற்றும் மணற்பாங்கான மண் வகைகள், மிக குறைவான மண் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறன் கொண்டவையாக காணப்படும். இவ்வகை மண்களில் வளரும் பயிர்கள், நீண்ட வறண்ட சூழ்நிலையில் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் சமச்சீரற்ற மற்றும் சரிவான நில அமைப்புகளினால் மழை நீரானது மண்ணில் உட்கரிக்கும் முடியாமல் நீரோட்டமாக ஓடிவிடும்

வளம்
குன்றிய மண்

மானவாரி நிலங்கள் வறண்டும் மண் வளம் குன்றி நிலையில் உள்ளன போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாததால், மண் வளத்தை மேம்படுத்த இரசாயன உரத்தை பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும்.

 
 
Fodder Cholam