Agriculture
ஒருங்கிணைந்த பண்ணை முறை

பயன்கள்

  • அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகையின் தேவையை சமநிலைபடுத்தப் படுகிறது.
  • மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது.
  • நீடித்த மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி.
  • ஒருங்கிணைந்த வேளாண் சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட் , கொழுப்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது.
  • பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மற்றும் புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது.
  • முட்டை, பால், காளாண், காய்கறிகள் தேன் மற்றும் பட்டுப்புழு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை முறை மூலம் நிலையான வருவாய் கிடைக்கிறது.
  • ஒருங்கிணைந்த பண்ணை முறைகளான உயிர் வாயு மற்றும் வேளாண் வனவியல் போன்றவற்றின் மூலம் ஏற்படும் ஆற்றல் இழப்பினைத் தவிர்க்கலாம்.
  • சாகுபடியின் போது தீவனப்பயிர்களை ஊடுபயிராக அல்லது எல்லைப்பயிராக பயிரிடுவதால் பசு, ஆடு, பன்றி மற்றும் முயல் போன்ற கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைக்கிறது.
  • வேளாண் வனவியலின் மூலம் மண் அரிப்பானது தடுக்கப்படுகிறது.
  • விவசாயிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பானது அதிகரிக்கிறது.
 
Fodder Cholam