|   | |||||||||||||||||||||
| உர நிர்வாகம்  | |||||||||||||||||||||
| உளுந்து விதை நேர்த்தி  ஒரு கிலோ விதைக்கு  டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம்  கொண்டு விதைநேர்த்தி செய்யவும் அல்லது கார்பென்டாசிம் (அ) திரம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம்  கழித்து விதைக்கவும். பயனுள்ள ரைசோபியம் பாக்டீரியாக்களை பூசண மருந்து கலந்த  விதையுடன் கலக்கக் கூடாது. ட்ரைக்கோடெர்மா அல்லது சூடோமோனாஸ்  கலந்த விதையுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம். உரமிடுதல்  விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால் எக்டருக்கு 2 சதவீதம் டை அம்மோனியம் பாஸ்பேட்டை பூக்கும் தருணத்தில் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். 
 குறிப்பு: 
 உளுந்தின்  மகசூலை அதிகரிக்க 1% யூரியாவை  இலைவழியாக தெளித்தல்  மகசூலை  அதிகரிக்க வினையியல், உயிர் இயைபு வழி பண்புகள்,  இலைத் தெளிப்பாக யூரியா 1% விதைத்த 30 மற்றும் 45ம் நாளில் தெளிக்க  பரிந்துரைக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் நெல் தரிசு பயறுகளுக்கு தற்போது  பரிந்துரைக்கப்பட்ட 2% டி.ஏ.பி கரைசலை இலைவழித் தெளிக்கும்  முறையைப் பயன்படுத்தலாம். வறட்சியைத்  தாங்குவதற்கு இலைவழித் தெளித்தல்  உளுந்தில்  வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2%  பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரான்  பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம்  அதிக மகசூல் பெற முடியும். உளுந்தில்  நுண்ணூட்டப் பொருள் கொண்டு சிக்கனமாக விதைநேர்த்தி செய்தல்  உயிர் உரங்கள் மற்றும் துத்தநாகம், மாலிப்டினம் மற்றும் கோபால்ட் போன்ற  நுண்ணூட்டச்சத்துகள் கொண்டு விதைக்கு மேல் பூச்சு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு 0.5  கிராம் பயன்படுத்த வேண்டும். பயறு  வகை பயிர்களுக்கு தழைச்சத்துக்கு மாற்றாக உயிர்ம ஆதாரங்கள்  50 சதவிகித நைட்ரஜனுக்கு மாற்றாக  உயிர்ம ஆதாரம் (ஏக்கருக்கு 850 கிலோ மண்புழு உரம்). பயறு வகை  பயர்களில் கார அமிலத் தன்மை 6.0க்கும் குறைவான மண்ணிற்கு சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. இலைவழி நுண்ணூட்டம்  டிஏபி அல்லது யூரியா,  என்ஏஏ மற்றும் சாலிசிலிக்  அமிலக் கரைசல் தெளித்தல்  இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40  மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி  கிராம் கலந்து  பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும்  தெளிக்கவேண்டும் நெல் தரிசு பயறு வகைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20  கிராம்  பூக்கும் தருணத்திலும் மற்றும் 15  நாட்கள் கழித்தும் தெளிக்கவேண்டும். மானாவாரி மற்றும் இறவை பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20  கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து  பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும்  தெளிக்கவேண்டும் பன்முக பூக்கும் தொழில்நுட்பம்  பட்டுக்கோட்டை வட்டம்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பச்சைப் பயிரின் சிறப்பு  தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வண்டல் மண், கரிம பொருள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முன் கோடையில்  பயிரிட்டால் மற்ற பயிர்களைப் போன்று உரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதனுடன்  கூடுதலாக நைட்ரஜன் 25 முதல் 30 கிலோ  யூரியாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பயறு வகை பயிர்கள் உறுதியற்ற வளர்ச்சி  பண்புகளைக் கொண்டவை. விதைத்த 40-45ம் நாள் மேலுரமிடல்  வேண்டும். பயிரின் 60-65ம் நாள் முதிர்ந்த காய்களுடன்  காணப்படும். அடுத்த 20-25ம் நாள் இரண்டாம் முறை முதிர்ந்த  காய்கள் காணப்படும். எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை  செய்ய முடியும். நெல்- தரிசு டைஅமோனியம் பாஸ்பேட், என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் தெளித்தல் 
 விதை உற்பத்தி:  உரங்கள் எக்டருக்கு 25 : 50 : 25 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து + 5 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணூட்டக் கலவை இட வேண்டும். இலைத்தெளிப்பு 
 Updated on : December 2013 | |||||||||||||||||||||
| முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013 | |||||||||||||||||||||