Agriculture
உர நிர்வாகம்

கேழ்வரகு

இறவைப் பயிர்

நடவு வயலை தயார் செய்தல்

ஹெக்டருக்கு 12.5 டன்  தொழுவுரம் அல்லது மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும்.

குறிப்பு : உரங்கள் வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.

உர பயன்பாடு

  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில்  மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்குகளை அடையலாம். உயர் தீவர பயிர் அமைப்பை கொண்ட மண் அதாவது கேழ்வரகு – மக்காச் சோளம் – தட்டைபயறு இம்மண்ணிற்கு பொட்டாசியம் 310 கி/ஹெக்டருக்கு தேவைப்படும். முடிந்தவரை மண் பரிசோதனையின் படி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தை மண்ணிற்கு அளிக்க வேண்டும். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, மற்றும் சாம்பல் சத்து 30 கிலோ ஒரு ஹெக்டருக்கு இட வேண்டும்.
  • நடவிற்கு முன் தழைச்சத்தில் பாதியளவும், சாம்பல்சத்தில் பாதியளவும், மணிச்சத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும்.
  • உரக்கலவையை கடைசி உழவிற்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பை கொண்டு  உழுது மண்ணுடன் உரகலவையை ஒன்றிணைக்க வேண்டும்.
  • 10 பாக்கெட்டுகள் /ஹெக்டர் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட்டுகள் (2000 கிராம் /ஹெக்டர் பாஸ்போபாக்டீரியா அல்லது 20 பாக்கெட்டுகள் அசோபாஸ் (4000 கிராம்/ஹெக்டர்) இவற்றுடன் 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரம் கலந்து நடவிற்கு முன் இட வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை அளித்தல்

  • தமிழ்நாடு வேளாண்மைத்துறை அறிவுறுத்தலின் படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை 50 கிலோ/ஹெக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின்  மீது சமமாக இட வேண்டும்.
  • கலவையை மண்ணில் இட்டு கலக்க கூடாது.

பிராதான நில நிர்வாகம்

வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க, அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம் /ஹெக்டர்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள்  இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன்  15 -30 நிமிடம்  நனைக்க வேண்டும்.

மானாவாரி கேழ்வரகு

உரமிடுதல்

மானாவாரி கேழ்வரகு பயிரில் உரமிடுதல் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சரியான முறையில் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் உரபயன்பாடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. பொதுவாக பரிந்துரைக்கப்படும் அளவு தழைச்சத்து/மணிச்சத்து/சாம்பல்சத்து முறையே 40:20:20 கிலோ/ஹெக்டர். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து முழுவதும் விதைத்தவுடனும், தழைச்சத்து அளவை 2 அல்லது 3 ஆக பிரித்து ஈரப்பதத்தை பொறுத்து அளிக்க வேண்டும். நல்ல மழையளவும் ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% இரண்டு சம பகுதியாக பிரித்து விதைத்த பிறகு 25-30 மற்றும் 40-45 நாட்களில் அளிக்க வேண்டும். குறைந்த மழையளவு உள்ள பகுதியில், 50% விதை விதைக்கும் போதும் மீதி உள்ள 50% விதைத்த பிறகு 35 நாட்களில் அளிக்க வேண்டும்.

உயிர் உரங்கள்

ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் அசோஸ்பைரில்லம் ப்ரேசில்லன்ஸ் மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் அவமோரியை கொண்டு  விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி ரசாயனத்தில் விதைகளை முதலில் விதைநேர்த்தி செய்து பிறகு உயிர் உரக்கலவையில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். 

உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல்

  • பயிருக்கு தேவையான உயிர் உரத்தை ஒரு கிலோவுக்கு 25 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
  • விதைகளில் நன்றாக ஒட்டுவதற்கு ஒட்டும் கரைசல் அவசியம். இதற்கு 250 மில்லி தண்ணீரில், 25 கிராம் வெல்லம் (அ) சர்க்கரையை கரைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இவ்வாறு தயாரித்த பின் ஆறவைக்க வேண்டும்.
  • விதைகளின் மேல் நன்றாக கரைசல் ஒட்டும் அளவிற்கு கலந்து, பிறகு உயிர் உரத்தை விதைகளுடன் கலந்து விதைகளின் மேல் படுமாறு நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
  • விதைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாதவாறு தனியாக நிழலில் உலர்த்த வேண்டும்.
  • இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.

Updated on : December 2013

 
Fodder Cholam