Agriculture
களை மேலாண்மை :: பார்த்தீனியம் மேலாண்மை

பார்த்தீனியத்தைக்கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனியக் களைகளை சேகரித்து, அவற்றை 5-10 செ.மீ. நீளவாட்டில் சிறிதாக நறுக்கி, 10 செ.மீ.சுற்றளவில் 10 செ.மீ. உயரத்திற்கு கீழே இருந்து 5 செ.மீ. அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10% மாட்டுச்சாணத்தை கரைச்சலாக கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து 250-300 மண் புழுக்களை இந்த மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45-60 நாட்கள் வரை தொடர வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் சதவீதம்
சத்துக்கள் பார்த்தீனிய மண்புழு உரம் தொழு உரம்
தழைச்சத்து 1.15 0.50
மணிச்சத்து 0.44 0.45
சாம்பல்சத்து 0.97 0.72

இவ்வாறாக பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை மேற்கண்ட முறைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

 
Fodder Cholam