குறிப்பு  : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு  பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.
      
        
          | பருவம் | : | ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம். | 
        
          | நிலம் | : | நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். | 
        
          | நிலம் தயாரித்தல் | : | 2    முதல் 3 முறை    உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும். | 
        
          | விதை அளவு |  | 5    கிலோ / எக்டர் | 
        
          | இடைவெளி | : | 30    x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்) 60    x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு)
 | 
        
          | உரம்(எக்டருக்கு) | : | அடியுரம் 45:40:40    கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
 மேலுரம்
 விதைத்த 30 வது    நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின்     45:40:40 கிலோ    தழை, மணி, சாம்பல் சத்து
 இடவும்.
 | 
        
          | களை நிர்வாகம் | : | முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும். | 
        
          | நீர்ப்பாசனம் | : | விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை    மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். | 
        
          | பயிர்ப்பாதுகாப்பு | : | பொதுவாகத் தேவையில்லை | 
        
          | பசுந்தீவன அறுவடை | : | 50    விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை | 
        
          | விதை அறுவடை | : | விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம். | 
        
          | பசுந்தீவன மகசூல் | : | 192    டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்) | 
        
          | விதை மகசூல் |  | 1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை  45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60  நாட்கள் கழித்து விதைக்க வேண்டும் |