Agriculture
வேளாண்மை :: எண்ணெய் வித்துக்கள்

ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் இரகங்கள்
1. மானாவாரி
ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை)
எல்லா மாவட்டங்களும் இரகங்கள் : TMV 5, TMV 6
கலப்பினம் : TMVCH 1, YRCH 1
2. இறவை
வைகாசிப்பட்டம் (மே - ஜூன்)
எல்லா மாவட்டங்களும் கலப்பினம் : YRCH 1
கார்த்திகைப்பட்டம் (நவம்பர் - டிசம்பர்)
எல்லா மாவட்டங்களும் கலப்பினம் : YRCH 1
பங்குனி பட்டம் (மார்ச்- ஏப்ரல்)
எல்லா மாவட்டங்களும் கலப்பினம் : YRCH 1
3. தோட்டநிலம் (வரப்பு)
பல்லாண்டு பயிராக
எல்லா மாவட்டங்களும் இரகம் : CO 1
cator

ஆமணக்கு இரகங்கள்

பண்புகள் கோ 1
பெற்றோர் ஆனைமலையில் இருந்து தனிவழித்தேர்வு
வயது (மாதங்கள்) பல்லாண்டு பயிர்
விளைச்சல் கி.ஹெ 2.5 கிலோ, மரம், வருடம்
எண்ணெய் சத்து 57
சிறப்பு அம்சங்கள்  
தண்டின் நிறம் வெளிறிய சிவப்பு கலந்த பச்சை
சாம்பல் உறை இல்லை
மஞ்சள், காய்கள் பெரியது, தனித்தது, வெடிக்காதது
பயிரிட உகந்த முறை வரப்போரங்களிலும், தரிசு நிலங்களிலும் பயிரிட ஏற்றது.

 

பண்புகள் டி.எம்.வி. 5 டி.எம்.வி. 6 டி.எம்.வி.சி.எச். 1
பெற்றோர் எஸ்.ஏ × எஸ் 248.2 விபி 1 × ஆர்சி 962 எல்.ஆர்.இ.எஸ் 17 × டி.எம்.வி.5
வயது (மாதங்கள்) 4 5 5
விளைச்சல் கி/ஹெ      
தனிப்பயிர் 850 950 1300
கலப்புப் பயிர் - 500 600
எண்ணெய் சத்து 50 51.9 51.7
சிறப்பு அம்சங்கள்      
தண்டின் நிறம் வெளிரிய சிவப்பு சிவப்பு சிவப்பு
சாம்பல் உறை மூன்று இரண்டு மூன்று
மஞ்சரி/ காய்கள் முள் உடையது வெடிக்காதது, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் நடுத்தர நீளம், முட்கள் கொண்ட காய்கள் முட்கள் கொண்ட காய்கள்
பயிரிட உகந்த முறை தனிப்பயிர் மற்றும் கலப்புப் பயிர் தனி மற்றும் கலப்புப் பயிர் தனி மற்றும் கலப்புப் பயிர்

பண்புகள் கலப்பின  ஒய்.ஆர்.சி.ஹெச் 1
பெற்றோர் DPC 9 X TMV 5
வயது (நாட்கள்) 150-160
மகசூல் (கி/எக்டர்)  
மானாவாரி (கலப்புப்பயிர்)
மானாவாரி (தனிப்பயிர்) 2000
இறவை (தனிப்பயிர்) 3000
எண்ணெய் சத்து (%) 49
சிறப்பு அம்சங்கள்
தண்டின் நிறம் வெளிர் சிவப்பு
சாம்பல் உறை மூன்று
மஞ்சரி/ காய்கள் முள் உடையது வெடிக்காதது, தத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது
பயிரிட உகந்த முறை தனி மற்றும் கலப்புப் பயிர்

 

Castor

நிலம்  தயாரித்தல்

அமில நிலங்களைத்  தவிர பிற நிலங்களில் பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு மூன்று தடவை உழவேண்டும்.

விதையும் விதைப்பும்

இடைவெளி

பின்வரும் இடைவெளியை பின்பற்றவும்.

  மானாவாரி இறவை
இரகங்கள் 90 செ.மீ x 60 செ.மீ 90 செ.மீ x 90 செ.மீ
கலப்பினங்கள் 120 செ.மீ x 90 செ.மீ 150 செ.மீ x 120 செ.மீ

இறவையில் களிமண் உள்ள பகுதிகளுக்கு 150 X 150 செ.மீ. அகன்ற இடைவெளி கொடுக்க வேண்டும் டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தல் : சிறந்த தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்கள் தாக்கிய மற்றும் உடைந்த விதைகளை நீக்கி விடவேண்டும்.

விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணி நேரம் வைத்திருந்து விதைப்பு செய்யவும்.

மானாவாரி பகுதியில், விதைப்பிற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் 1% பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.

விதைப்பு : விதைகளை சிபாரிசு இடைவெளியில் விதைக்கவும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைப்பு செய்யவும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது.

விதைத்தல்

  • பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைகளை விதைக்கவும்.
  • 4-6 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைக்கவும்
  • ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை விதைக்கவும்

பாடு நிரப்புதல்

விதைத்த 15 ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். அப்போதே குழிக்கு ஒரு செடி வீதம் விடுத்து பயிர் கலைத்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்

உழவு செய்யப்படாத நிலத்தில் 12.5 டன், எக்டர் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவேண்டும்.

கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம். மண் பரிசோதனை படி பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இட வேண்டும். இல்லையெனில் பொதுவான பரிந்துரையின்படி உரங்கள் அளிக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட NPK கிலோ/ எக்டர்
மானாவாரி
இரகங்கள் 45 : 15 : 15 NPK கிலோ / எக்டர்
கலப்பினங்கள் 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்
இறவை
இரகங்கள் 60 : 30 : 30 NPK கிலோ / எக்டர்
கலப்பினங்கள் 90 : 45 : 45 NPK கிலோ / எக்டர்
  • மானாவாரி பகுதிகளில் 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள அளவுகளை ஒன்று (அ) இரண்டு முறை தகுந்த  ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும்.
  • இறவை பகுதிகளில், 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் இட வேண்டும்.
  • எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.

களை நிர்வாகம்

எக்டருக்கு பென்டிமெத்தாலின் 3 லிட்டர் (அ) ப்ளுக்ளோரலின் 2 லிட்டரை விதைத்த 3 ஆம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து விதைத்த 20 மற்றும் 40 நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.

ஊடுபயிரிடுதல்

ஒவ்வொரு 6 வரிசை நிலக்கடலைக்கு இடையே ஒவ்வொரு வரிசை ஆமணக்கு பயிரிட வேண்டும். பருவமழை தாமதமாக கிடைக்கும் பகுதியில், உளுந்து + ஆமணக்கை 6:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம் அல்லது ஆமணக்கை உளுந்து (அ) பச்சைப்பயிராடு  1:2 என்ற விகிதத்தில் மானாவாரி பகுதிகளில் பயிரிடலாம். இறவையில் ஆமணக்கை வெங்காயத்தோடு 1:2 என்ற விகிதத்தில் 1.5 மீX1.0மீ இடைவெளியில் பயிரிடலாம்.

அறுவடை

பயிரின் வயதினைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும்.

  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.
  2. முற்றிய விதைக் காத்தை இதர கொத்துக்களைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும்.
  3. விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும்.
  4. காய்ந்த கொத்தை குச்சி கொண்டு, அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கவும் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam