|  | நிலக்கடலையில் துத்தநாகச்சத்து  பற்றாக்குறை
 
 அறிகுறிகள் : இளம் இலைகளில் நடு  நரம்புப் பகுதியில், இளம் மஞ்சள் நிறப்பட்டை தோன்றும். நுனி இலைகள் மஞ்சள் நிறமாகி,  முற்றிலும் வளர்ச்சி குறைந்து இலைகள் வளர்ச்சியடையாமல் சிற்றிலைகளாகத் தோன்றும். நிவர்த்தி : எக்டேருக்கு 25 கிலோ  துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக பாதிப்புள்ள நிலத்தில் இட்டு வர வேண்டும். பற்றாக்குறை  தோன்றும் பொழுது, நூறு லிட்டர் நீரில் 500 கிராம் அளவில் துத்தநாக சல்பேட் கலந்த  கரைசலை, செடிகள் மீது தெளிக்க வேண்டும். |