Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை


இந்தியாவில் வேளாண் விளைபொருள் விற்பனை

தமிழ்நாட்டில் வேளாண்மை விளைபொருள் விற்பனை 


இந்தியாவில் வேளாண் விளைபொருள் விற்பனை

இந்தியா ஒரு வேளாண்மை நாடு மூன்றில் ஒரு பங்கு மக்கள், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மையைச் சார்ந்தே உள்ளனர். பண்டைய காலத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கியப் பங்கு வகுக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்களிப்பானது கிட்டத்தட்ட 25 சதவிகிதமாக உள்ளது. மக்களின் தேவைகளில் உணவு முக்கியமாக கருதப்படுவதால், வேளாண்மை உற்பத்தியை, வர்த்தகத்துறையில் ஈடுபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக தேவையான உற்பத்தி மற்றும் சரிவிகித பகிர்மானம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

வேளாண்மை விளைப்பொருள் விற்பனை என்பது வேளாண்மை விளைப்பொருட்களை வாங்குவது மற்றும் விற்பது ஆகும். ஆனால் ஆரம்பக்காலத்தில், கிராமப்புற பொருளாதாரமானது விவசாயிகள் வேளாண்மை பொருட்களை தன்னிறைவுக்காக விற்பனை செய்வதும், தற்போது விவசாயிகள் நுகர்வோர்களிடம் பணம் அல்லது பண்டமாற்று முறையின் அடிப்படையில் விற்பனை செய்யும் போது எந்த வித தடைபாடுகள் இல்லாமலும் இருந்தது. ஆனால் இன்றைய வேளாண்மை விளைப்பொருள் விற்பனையானது, நுகர்வோர்களிடம், விளைபொருள் சேர்வதற்கு முன் ஒரு நபரிடம் இருந்து பிற நபரிடம் விளைபொருளானது பரிமாற்றப்படுகிறது. ஒன்று சேர்ப்பது, நுகர்வு முன்னேற்பாடு மற்றும் பகிர்மானம் போன்ற மூன்று முக்கிய செயல்களானது விற்பனையில் பங்குவகிக்கிறது.  அந்தந்த நேரத்தில் இருக்கும் விளைப்பொருளின் தேவை, கிடைக்கக்கூடிய சேமிப்பு போன்ற கூறுகளின் அடிப்படையில் வேளாண்மை விளைப் பொருளானது விற்பனை செய்யப்படுகிறது.

விளைபொருள் நேரிடையாக சந்தையில் விற்கப்படுகிறது அல்லது காலநிலையை பொறுத்து அப்பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் விளை நிலத்தில் இருந்து கிடைத்ததை சேகரித்து விற்பது அல்லது விளை நிலத்தில் கிடைத்தப் பொருளை சுத்தம் தரம் பிரிப்பது மற்றும் பதப்படுத்துவது போன்ற செயல்பணிகளை விவசாயிகளோ அல்லது அந்த கிராமத்தின் வணிகர்கள் மூலம் செய்து விற்பது போன்றவையும் அடங்கும். சில நேரங்களில்  நுகர்வோர்களின் தேவை அல்லது விளைபொருட்களின் தரம் சிதைவு ஏற்படாமல் பேணுவது போன்றவற்றிற்கான பதப்படுத்துதல் முறையானது செய்யப்படுகிறது.

பகிர்மான முறையின் செயலானது, முதல் நிலை, இரண்டாம் நிலை அல்லது முனையம் விற்பனையை உள்ளடக்கிய மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றின் மூலம் தேவையின் அடிப்படையில் செய்யப்படும் விநியோகத்திற்கு ஒப்பிடத்தக்கதாகும் / இணையானதாகும். பெரும்பாலும் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை, வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் (விளைச்சலுக்கு பணம் கொடுக்கும் வியாபாரிகள்) அல்லது கிராமப்புற வியாபாரிகளிடம் விற்கின்றனர். இந்த விளைப் பொருட்களானது பல்வேறு வழிகளில் விற்கின்றனர். அதாவது, கிராமப்புற விவசாயிகள் உள்ளூர் வாரச் சந்தையில் அல்லது பக்கத்து கிராமப்புற சந்தையில் விற்கின்றனர். இந்த மாதிரியான விற்பனை வழிகள் இல்லையெனில் விளைபொருட்களானது பக்கத்தில் உள்ள கிராமம் அல்லது சிறு நகரம் அல்லது மண்டியில் விற்கின்றனர்.

இந்தியாவில், வேளாண்மை விலை மற்றும் செலவு ஆணைக்குழு, இந்திய உணவுக் கழகம், இந்திய பருத்தி கழகம், இந்திய சணல் கழகம் போன்ற பல்வேறு மத்திய அரசாங்க நிர்வாக அமைப்புகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் ரப்பர், தேயிலை,காபி, புகையிலை, நறுமணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு தனிச்சிறப்பினை உடைய விற்பனைக்கூடங்களும் உண்டு. வேளாண்மை உற்பத்தி (தரம் பிரித்தல் மற்றும் விற்பனை) ஆணை 1937ன் படி 40க்கும் மேற்பட்ட முதல்நிலை வர்த்தகமானது, ஏற்றுமதி பொருட்களை கண்டிப்பாக தரம் பிரிப்பதும் உள்நாட்டு நுகர்வு பொருட்களை தானாகவே முன்வந்து தரம் பிரிப்பதும் போன்ற செயல்களை செய்கின்றது. வர்த்தக விற்பனையின் வழிமுறைகளானது மாநில அரசாங்கத்தின் செயல்நிலை ஆகும். விற்பனை மற்றும் கண்காணி இயக்ககம் மூலம் விற்பனை மற்றும் கண்காணிக்கும் சேவைகள் மற்றும் கிராமப்புற அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனை நிலையத்தில் வர்த்தகப் பொருள் தரம் பிரிக்கும் மையங்கள் அமைப்பதற்கான நிதிச் சேவை போன்றவற்றை அளிக்கிறது.

பாரம்பரிய மிக்க வேளாண்மை உற்பத்தி,  விற்பனை மற்றும் இதனைச் சார்ந்த வர்த்தகச் செயல்களில், மதிப்பூட்டப்பட்ட சேவையின் மூலம் புதிய எண்ணங்களைக் கொண்டு வருவதற்கு இது சரியான நேரமாகும். இந்த மதிப்பூட்டப்பட்ட சேவையின் மூலம் வேளாண்மை இயந்திரத்தின் ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

இதற்கு அடுத்ததாக, உணவு பதப்படுத்துதலின் முக்கிய வருமானம் ஈட்டும் பகுதியாக மட்டும் அல்லாமல், முழு நேர  வேலை வாய்ப்பினை இன்றைய இளைஞர்களுக்கு அளிக்கிறது. வேளாண்மை பகுதி மற்றும் உலக அளவில் ஏற்படும் மாற்றங்களில் போது கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும்.

1970-71 மற்றும் 1971-72 ஆம் ஆண்டுகளில் வேளாண் அமைச்சகத்தின் விற்பனை மற்றும் கண்காணி இயக்ககம் மூலம் 500 ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் எடுத்த கருத்தாய்வில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் போதுமான விற்பனை மற்றும் வினைதிறன் பற்றிய மதிப்பீடு, குறைவாடுகள் பற்றாக்குறைகள் மற்றும அதற்கான ஆலோசனைகள் போன்றவற்றை பற்றியும் கோடிட்டு காட்டுகிறது. சில விற்பனைக் கூடத்தின் நிதிப்பற்றாக்குறை குறைபாடுகளில் ஒன்றாகும். நான்காவது திட்டத்தின் போது வேளாண் அமைச்சகத்தின் மூலம் கொடுக்கப்படும் மத்திய பகுதித் திட்டம் ஆனது, விற்பனை மேம்பாட்டிற்று ஆகும் செலவில் 20 சதவிகிதம், அதாவது அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சங்களை கொடுக்கிறது. மீதித்தொகை கடன் வங்கிகள் தருகின்றது.

பன்னாட்டு மேம்பாட்டு முகாம் (IDA) மூலம் செய்யப்படும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு, ஒரு முக்கிய மேம்பாடு ஆகும். பீகாரில் மட்டும் 50 விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் பாசனநீர், கிராமப்புற கட்டமைப்பு, குடிநீர் மறுசேமிப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு போன்றவற்றின் நல்ல செய்திகளும் அடங்கும். மேலும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மூலம் கொடுக்கப்படும் முதலீட்டினைக் கொண்டு சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டிணைப்பு (SFAC)ன் நிர்வாகத்தினை உயர்த்துகிறது.

ஆதாரம்: http://www/domain.com/economy/agricultural/20040713_marketing.html


தமிழ்நாட்டில் வேளாண்மை விளைபொருள் விற்பனை 

முன்னுரை

வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மைச் சார்ந்த தொழில்கள் துறையின் நோக்கம் யாதெனில் நியாயமாக விலையை, போட்டிமிகுந்த விற்பனை பகுதிகளின் பின்னால் உள்ள பண்ணை கூட்டமைப்புகளுக்கு நிர்ணயிப்பது ஆகும். மேலும், சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை பயன்படுத்துதலில் ஆற்றலுடனும், புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதலின் மூலம் முன் மற்றும் பிந்திய அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பதும், இதற்காக சிறந்த முறையைக் கையாளுவதும் மற்றும் மதிப்பூட்டப்படுவதனை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். பசுமைப் புரட்சி என்ற புது முயற்சி மூலம் உணவு தானியங்களின் உற்பத்தியானது உயர்த்தப்பட்டு உள்ளது.

இது மட்டுமல்லாமல் வேளாண்மை விற்பனையை மேம்படுத்துவதற்காக பல்வேறு புது முயற்சிகளை எடுத்துள்ளது. ஊரக பொருளாதார மேம்பாட்டிற்கு வேளாண்மை விளைபொருள் விற்பனை கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. வேளாண்மை விளைச்சலில் விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

வேளாண்மைச் சார்ந்த தொழில்களானது, வினியோகத்திற்கு ஏற்ற வர்த்தகப் பொருட்களை உள்ளடக்கியது மற்றும்  இது சில முன் மற்றும் பிந்திய செயல்பணிச் செயல்களான் தரம் பிரித்தல், மதிப்பூட்டல், தொகுத்தல், பதப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிலும் ஈடுபடுகிறது. இந்தச் செயல்பணிகளானது பண்ணை உற்பத்தியின் மதிப்பை உயர்த்துகிறது.

1977 ஆம் ஆண்டில் இருந்து வேளாண்மை விளைபொருள் விற்பனைத் துறையானது செயல்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோள் யாதெனில் வேளாண்மை விளைபொருள் விற்பனை வழிமுறைகளை உள்ளடக்கியதாகும். இந்தத் துறையானது 2001 ஆம் ஆண்டு வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மையைச் சார்ந்த தொழில்களின் துறை என்ற பெயரில் மாற்றப்பட்டு, வேளாண் ஏற்றுமதி, அறுவடைக்குப் பின் மேம்பாடு, உணவுப் பதப்படுத்துதல் போன்ற மற்ற செயல்களையும் செயல்படுத்துகிறது.

மறுகட்டமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்மைச் சார்ந்த தொழில்), ஒவ்வொரு இரண்டு பகுதிக்கும் ஒரு வேளாண்மை அலுவலகர், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வேளாண்மை துணை அலுவலகர் போன்ற மறுகட்டமைப்பு மூலம் வேளாண்மைச் சார்ந்த தொழிலை ஒழுங்குபடுத்துவதும், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதும் ஆகிய செயல் செய்யப்படுகின்றது. 103 உழவர் சந்தை அலுவலர்கள் 51 வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 52 வேளாண்மை துணை அலுவலர்கள் பதவி வகிக்கின்றனர். வேளாண்மை விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண்மைச் சார்ந்த தொழில் துறையானது மறுகட்டமைப்பு மூலம் 239 பதவியானது 906 பதவியாக உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய செயல்கள்

  1. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்காக, உழவர் சந்தைகளை தொடங்குவதும், பாதுகாப்பதும்.
  2. பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் ஏற்றுமதியை உள்ளடக்கிய சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக விற்பனை வாய்ப்பினை உருவாக்குகிறது.
  3. விவசாயப் பண்ணை குழுக்களின் வாங்குவது மற்றும் விற்பது போன்ற செயல்களுக்காக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தினைத் தொடங்குவதும், பாதுகாப்பதும்.
  4. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தல் தரம் பிரிப்பதன் மூலம் உற்பத்தியாளர்களின் வேளாண் பொருட்களுக்கு விலையை உயர்த்துதல்.
  5. விவசாயிகளுக்கு தரம் பிரித்தல், விற்பனை, மதிப்பூட்டப்படுதல், வேளாண் பொருளை பதப்படுத்துதல் போன்றவற்றைப் பற்றிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடமானது அதனைப் பற்றிய விபரங்களையும் தருதல்.
  6. வேளாண்மையை ஏற்றுமதி பகுதி அமைப்பதன் மூலம் வேளாண்மை விளைபொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது, அறுவடைக்குப் பிந்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் மற்றும் கம்ப்யூட்டர்  மூலம் பன்னாட்டு விற்பனை விலை விபரங்களை அறிவது போன்றவற்றைச் செய்கிறது.
  7. நுகர்வோர்களுக்காக, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் வனவியல் உற்பத்தியின் அக்மார்க் தரம்.
  8. விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குளிர்ப்பதன சேமிப்பு வசதிகளை அமைத்தல் இதன் மூலம் அனுகூலமான விலையில் பொருட்களை விற்பது மற்றும் நுகர்வோர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது.
  9. உணவுப் பதப்படுத்துதல் தொழில் மூலம் வேளாண்மை உற்பத்திப் பொருட்களை வீணாக்குவது தடுக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பது மற்றும் அந்நிய நாட்டு பகிர்மானத்தை ஊக்குவிப்பது போன்றவையும் அடங்கும்.

விற்பனை செயற்குழு : தமிழ்நாட்டில் 21 விற்பனை செயற்குழு தற்போது உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

277 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 15 சரிபார்க்கும் தளம், 108 ஊரகக் கிடங்குகள், 108 தரம் பிரிக்கும் மையங்கள் விற்பனை செயற்குழுவின் கீழ் உள்ளது. இங்கு மறைமுக வர்த்தக முறையின் மூலம் விவசாயிகள் விலையை நிர்ணயித்து அதன் பின் விற்கப்படுகிறது.

வேளாண்மை வர்த்தகப் பொருட்களுக்கு இலவசமாக தரம் பிரித்தல் வசதிகளும், விற்பனை குறைவாக இருக்கும் போது பொருளை வைத்துக் கடனும் தரப்படுகிறது.

மகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விற்கின்றது. விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்கும் வர்த்தகக்காரர்களிடம் விற்பனைக் கட்டணமாக பொருட்களின் மதிப்பில் 1-2 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வர்த்தககாரர்களிடம் 1 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நீலகிரியில் விற்பனை செயற்குழு மூலம் கூடத்தினை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் போன்ற இடங்களில் ஒழுங்குமுறை விற்பனக்கூடத்தினை அமைப்பதற்கு இந்த ஆண்டில் ஆகிய செலவு ரூபாய் 3.25 கோடிகள் ஆகும். பல்வேறு தேவையான நடவடிக்கைகளான விற்பனைக்கூடம் அமைப்பதற்கான நிலையத்தினை தயார் செய்வதற்கு நீலகிரி கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் சேவைகள்

மின்னணுவியல் கருவி மூலம் எடை எடுக்கும் வசதிகள், சேமிப்புக் கிடங்கு வசதிகள், வங்கி வசதி, உடனுக்குடன் தொகை செலுத்துதல், தினசரி விலையின் விபரம், ஓய்வுக்கூடம், குடிநீர் வசதி, மாடு கட்டும் கூடம் இலவச மருத்துவ வசதி, இடுபொருள் கடைகள்,  தொலைபேசி மற்றும் பிரதி வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளை தருகிறது. அக்மார்க்நெட் மூலம் 93 ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் விலையை விவசாயிகள் கம்ப்யூட்டர் மற்றும் இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விலைப்பட்டியலை விவசாயிகள் தெரிந்து கொண்டு, அதன் மூலம் விலையை நிர்ணயிக்கலாம். 2007-08ல் 100 ஒழுங்குமுறைக் கூடமானது அக்மார்க் நெட்டின் மூலம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி பொருளின் அறிவிப்பு

தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள். எண்ணெய் விதைகள், பருத்தி. மஞ்சள் போன்ற 42 வகையான வேளாண்மைப் பொருட்களானது அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டின் போது வேளாண்மை வர்த்தகப் பொருட்களில் சமமான அறிவிப்பினை அறிவிக்கத் தேவையான செயல்கள் / நடவடிக்கைகள்  எடுக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு அடமானக் கடன் வசதிகள்

சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைப் பொருட்களில் விற்பனையில் ஏற்படும் இழப்பினைத் தடுக்க, ஒழுங்கு முற விற்பனைக் கூடமான அடமானக் கடனைத் தருகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் 6 மாதம் வரை வேளாண்மைப் பொருட்களை சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கலாம். இதற்காக விளைப்பொருட்களில் 75 சதவிகிதத்தினை கடனாக, அதாவது அதிகமாக ரூபாய் 1,00,000த்தினைப் பெறலாம்.

இதே போல் வர்த்தகர்களுக்கு அடமானக் கடனானது காலநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வட்டியானது வசூலிக்கப்படும். வர்த்தகக்காரர்களிடம், 9 சதவிகித வட்டியானது வசூலிக்கப்படும். முந்தைய நதி ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி விகிதமானது 8 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகளின் மேம்பாடு மற்றும் பொது நலத்திட்டம்

இந்தத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் / குத்தகைக்காரர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் 1 மெட்ரிக் டன் அளவுள்ள நெல் அல்லது சமமான பிற வேளாண்மை விளைப்பொருட்களை விற்கலாம். மேலும் ஒருவரின் மரணத்தின் போது / விபத்தினால் நிரந்தரமான குறைபாடு / பாம்பு கடித்து மரணமடையும் போது, இந்தக்கூடமானது மொத்தப் பணமாக / கணிசமான தொகையாக ரூபாய் 1,00,000 யை தருகிறது. விபத்தின் போது இரண்டு கைகள், கால்கள், கண்கள் இழந்த விவசாயிகள் / குத்தகைதாரர்கள் ரூபாய் 75,000 பெற தகுதியுள்ளவர்கள் ஆவர். விவசாயிகள் இதற்காக முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. விற்பனை செயற்குழு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் போன்றவை ஒவ்வொரு தனி நபருக்கும், ஒரு வருடத்திற்கு ரூபாய் 10யை முன்பணமாக தருகிறது.

அக்மார்க் தரம்

அக்மார்க் தரம் பிரித்தல் என்பது வேளாண்மை விளைபொருட்களை குறைகளில் இருந்து பாதுகாத்து தரத்தினை மேம்படுத்துவதாகும். காய்கறி, எண்ணெய், நெய், வெண்ணெய், தேன், கோதுமை மா, வாசனைத் திரவியம், ஜவ்வரிசி, நெல், பயிறு வகைகள், கேழ்வரகு, வெல்லம், மஞ்சள், உருளைக்கிழங்கு போன்றவற்றின் தரத்தினை அறிவதற்காக 30 அக்மார்க் தரம் பிரிக்கும் ஆய்வுக் கூடங்களும், ஒரு பிரதான அக்மார்க் தரம் பிரிக்கும் ஆய்வுக்கூடமும் நடைமுறையில் உள்ளது. முந்திய நிதி ஆண்டில் விநியோகர்கள் நுகர்வோர்களின் நலனுக்காக மாநில அக்மார்க் தரம் பிரிக்கும் ஆய்வுக்கூடம் மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை மையம் போன்றவற்றின் இயந்திரக் கருவிகளை வாங்குவதற்காக ரூபாய் 25.46 லட்சத்தினை பகுதி II திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உலர்களம் அமைத்தல்

10 சதவிகித வேளாண்மை வர்த்தகப் பொருள்களின் வீண் கழிவில் பின் சரியான இழப்பானது அறுவடைக்கு பின் சரியான நடைமுறைகள் / செயல்முறைகள் இல்லாததால் ஏற்பட்டதாகும். இந்த இழப்பினை தடுப்பதற்கு அவசியம். 1997ல் இருந்து இந்தத் திட்டத்தின் மூலம் ரூபாய் 23.20 கோடி செலவில் 1228 காயப்போடும் முற்றமானது கட்டப்பட்டுள்ளது. 2007-08ல் 100 காயப்போடும் முற்றத்தின் கட்டுமானப் பணிகள் ரூபாய் 2.50 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்தத் திட்டமானது 2008-09 வரைக்கும் தொடரும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு